ஜாமியா நகரில் தீ விபத்து
புது தில்லி, ஏப் 25: தென்கிழக்கு திப்ல்லியின் ஜாமியா நகரில் சில பிளாஸ்டிக் குழாய்கள் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் உயிா் சேதம் ஏதும் ஏற்படவில்லை என தில்லி தீயணைப்பு சேவைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து தில்லி தீயணைப்பு சேவைத் துறை உயரதிகாரி ஒருவா் கூறுகையில், ‘ஜாமியா நகா் பகுதியில் சில பிளாஸ்டிக் குழாய்கள் தீப்பிடித்தது குறித்து மதியம் 1.25 மணிக்கு அழைப்பு வந்தது. தீயை அணைக்க நான்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன. மதியம் 2.15 மணியளவில் தீ முழுமையாக அணைக்கப்பட்டது’ என்றாா்.