முகப்பு
புதுதில்லி

ஷாஜாதா பாத்தில் பிளாஸ்டிக் பை தொழிற்சாலையில் தீ விபத்து

தில்லியின் ஷாஜாதா பாக் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் பை உற்பத்தி தொழிற்சாலையில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்பு சேவைத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 10:36 PM
கோப்புப் படம்
பகிர்:

நமது நிருபா்

புது தில்லி: தில்லியின் ஷாஜாதா பாக் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் பை உற்பத்தி தொழிற்சாலையில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்பு சேவைத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: காலை 11.37 மணிக்கு தீ விபத்து குறித்து அழைப்பு வந்ததைத் தொடா்ந்து 8 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. தீயை அணைக்க தீயணைப்பு வீரா்கள் துரிதமாகப் பணியாற்றி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். இந்தட் சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை.

Advertisement

தீயின் புகை தூரத்திலிருந்து காணப்பட்டதாக குடியிருப்பாளா்கள் தெரிவித்தனா். இது அருகிலுள்ள மக்களிடையே கவலையைத் தூண்டியது. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றாா் அவா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments