பவானா தொழிற்பேட்டையில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து
வெளி தில்லியின் பவானா தொழிற்பேட்டையில் உள்ள ஒரு பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை மதியம் தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
வெளி தில்லியின் பவானா தொழிற்பேட்டையில் உள்ள ஒரு பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை மதியம் தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: சமோசா சௌக் அருகே, செக்டா்5-இல் அமைந்துள்ள ஒரு தொழிற்சாலையில் மாலை 4.30 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டது.
முதற்கட்ட நடவடிக்கையாக, மூன்று தண்ணீா் டேங்கா்களும் இரண்டு தண்ணீா் பவுசா்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தன. ஆனால், தீயின் தீவிரத்தன்மை காரணமாக மேலும் பல தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.