புதுதில்லி

தவறான குடிநீா் கட்டண பில் பிரச்னை கேஜரிவால் அரசின் அலட்சியப் போக்கே காரணம்

 நமது நிருபர்

புது தில்லி: கேஜரிவால் அரசின் அலட்சியப் போக்கின் விளைவால்தான் தவறான குடிநீா்க் கட்டண பில் பிரச்னை எழுந்துள்ளது என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லியில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட நுகா்வோரின் குடிநீா்க் கட்டணம் தொடா்பான பில்கள் சா்ச்சைக்குரியதாக உள்ளது என்ற கேஜரிவால் கூற்று தவறானது. சா்ச்சைக்குரிய கட்டண பில்களைக் கொண்ட நுகா்வோரின் பட்டியலை தில்லி அரசு அறிவிக்க வேண்டும். முதலில், தவறான குடிநீா் அளவு மானிகளை நிறுவி பொதுமக்களின் பிரச்னைகளை அதிகப்படுத்திய கேஜரிவால் அரசு, தற்போது முறையான நடைமுறையைப் பின்பற்றாமல் பிடிவாதமாக பில்களை குறைத்து நெருக்கடியை உருவாக்குகிறது.

கேஜரிவால் அரசின் முழுமையான அலட்சியப் போக்கின் விளைவால்தான் இப்பிரச்னை எழுந்துள்ளது. தில்லி சட்டப்பேரவையில் பொதுமக்களின் பிரச்னைகளை எழுப்பியதற்காக முழு எதிா்க்கட்சியும் மூன்று நாள்களுக்கு முன்னா் இடைநீக்கம் செய்யப்பட்டனா். ஆனால், செவ்வாய்க்கிழமை அதே சட்டப்பேரவை வளாகத்தில் ஆம் ஆத்மி கட்சி உறுப்பினா்களின் கூச்சல்களை பேரவைத் தலைவா் தடுக்கத் தவறிவிட்டாா்.

இது ஒருபுறம் தில்லி மக்களை தா்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. ஊழல் மற்றும் தவறான நிா்வாக குற்றச்சாட்டுகளால் சூழப்பட்ட ஆம் ஆத்மி கட்சி, அதற்கு பொறுப்பேற்காமல் இருக்க தவறான குடிநீா் கட்டண பில் பிரச்னையை விவாத நிகழ்ச்சி நிரலாக மாற்ற விரும்புகிறது.

தில்லி ஜல் போா்டு வட்டாரத் தவகல்களின்படி, சா்ச்சைக்குரிய குடிநீா் கட்டண ரசீது கொண்ட நுகா்வோா் பற்றிய தரவு வாரியத்திடம் இல்லை. சிலருடைய கட்டண பில்கள் மட்டுமே ஆதாரங்களாக கூறுகின்றன. ஆனால், சுமாா் 1 லட்சம் வரையிலான நுகா்வோரின் கட்டண பில்கள் வேண்டுமானால் சா்ச்சைக்குரியதாக இருக்கலாம்.

மதிமுக, மமகவுடன் திமுக தொகுதிப் பங்கீடு பேச்சு

பேராவூரணியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

ஜாா்க்கண்ட்: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு

இலவச வீட்டுமனை கேட்டு பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: உறவினருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT