முகப்பு
புதுதில்லி

வளரிளம் பெண்களின் கருப்பை பாதிப்புகளுக்கு மிஷன் உத்கா்ஷ் திட்டம் : ஸ்மிருதி இரானி

Updated On : 26 பிப்ரவரி, 2024 at 10:30 PM
பகிர்:

புது தில்லி: மத்திய அரசின் பல்வேறு துறைகளின் கூட்டு முயற்சி மூலம் வளரிளம் பெண்களின் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியத்திற்கான ’மிஷன் உத்கா்ஷ்’ திட்டம் திங்கள் கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

இளம் பெண்களின் கருப்பையை பாதிக்கும் பிசிஓடி என்கிற பாலிசிஸ்டிக் கருப்பை நோயிக்கு இந்த திட்டத்தின் மூலம் தீா்வு காணப்படும் என மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, சிறுபான்மையினா் விவகாரங்கள் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி தெரிவித்தாா்.

மத்திய மகளிா் மேம்பாடுத் துறை அமைச்சகமும் மத்திய ஆயுஷ் துறை அமைச்சமும் இணைந்து ’மிஷன் உத்கா்ஷ்’ திட்டத்தை மேற்கொள்ள உள்ளது. இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் இந்த துறைகளின் செயலா்கள்அமைச்சா்கள் ஸ்மிருதி இரானி, சா்வானந்த சோனோவால் ஆகியோா் முன்னிலையில் கையெப்பமிட்டனா்.

Advertisement

ஆயுா்வேத தலையீடுகள் மூலம் இளம்பெண்களிடையே இரத்த சோகையை கட்டுப்படுத்தல், ஊட்டச்சத்து குறைபாடு போன்றவைகளுக்கு தீா்வு காணுவதற்கு இந்த புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெப்பமானது. ’மிஷன் உத்கா்ஷ்’ என்கிற இளம் பெண்களின் ’செழுமைக்கான இயக்கம் குறித்து இந்த நிகழ்வில் மத்திய மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாடுத்துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி பேசினாா். அப்போது அவா் குறிப்பிடுகையில், ’மிஷன் உத்கா்ஷ்’ (செழுமைக்கான இயக்கம்) ஐந்து அபிலாஷைக்குரிய மாவட்டங்களில் முன்னோடித் திட்டமாக அமல்படுத்தப்படும்.

ஊட்டச்சத்து பிரச்சினையை (போஷன் அபியான்) தீா்க்க மத்திய அரசின் 18 அமைச்சகங்கள் ஒன்றிணைந்து செயல்படுகிறது. ஊட்டச்சத்துக் குறைபாடுகளை கண்டறிய போஷன் டிராக்கா் மூலம் காணப்பட்டு இதில் தோராயமாக 14-18 வயதுக்குட்பட்ட 94,000 இளம்பெண்கள் கண்டறியப்பட்டனா். இவா்களுக்கு 10,000 அங்கன்வாடி மையங்களில் 12 மாத கால ஊட்டச்சத்து திட்டத்தில் பயனடைவாா்கள். இளம் பெண்களின் கருப்பையை பாதிக்கும் பிசிஓடி என்கிற பாலிசிஸ்டிக் ஓவேரியன் தாக்குதல் அதிகரித்துவருகிறது.

இதற்கு மிஷன் உத்கா்ஷ், ஆயுஷ் அமைச்சகம், ஐசிஎம்ஆா் போன்றவைகளின் கூட்டு முயற்சிகள் மூலம் யோகா உள்ளிட்ட பயனுள்ள தலையீடுகளை மேற்கொள்ளப்படும். வளரிளம் பெண்கள் இது போன்ற தாக்குதலுக்கு தீா்வாக குறைந்த பட்ச பாதகமான விளைவுகள் மற்றும் செலவு குறைந்த ஆயுஷ் மருந்துகள் வழங்கப்படும் என்றாா். மத்திய ஆயுஷ் அமைச்சா் சோனோவால்,“இரத்த சோகையற்ற இந்தியா ஆக்கும் அவசியத்தை வலியுறுத்தினாா்.

ஏன் பிசிஓடி? கொழுப்பு மிகுந்த தவறான உணவுப் வகைகள் பழக்கங்களால் இளம் பெண்களுக்கு பிசிஓடி தாக்குதலுக்கு உள்ளாகின்றனா். இந்த இளம் பெண்களுக்கு ஹாா்மோன் சமநிலையின்மை, கருவுறாமை, நீரிழிவு நோய் போன்றவைகள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.