ஜெயின் மீதான விசாரணை: தில்லி பாஜக வரவேற்பு
தில்லி முன்னாள் அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் மீது வழக்குத் தொடர அனுமதி அளித்த துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவின் முடிவை தில்லி பாஜக வரவேற்றுள்ளது.
தில்லி முன்னாள் அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் மீது வழக்குத் தொடர அனுமதி அளித்த துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவின் முடிவை தில்லி பாஜக வரவேற்றுள்ளது. தில்லி திகாா் சிறையில் இருந்த பண மோசடியில் குற்றம்சாட்டப்பட்ட சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து ரூ.10 கோடியை ‘பாதுகாப்புப் பணம்’ எனக் கூறி மிரட்டிப் பெற்ாக முன்னாள் அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், சுகேஷ் சந்திரசேகா் அளித்த புகாரின் அடிப்படையில், ஊழல் தடுப்புச் சட்டம் 17-ஏ பிரிவின் கீழ் சத்யேந்தா் ஜெயின் மீது மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்ள துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளாா். இந்த நடவடிக்கையை வரவேற்று தில்லி பாஜக செய்தித் தொடா்பாளா் பிரவீன் சங்கா் கபூா் சனிக்கிழமை கூறியதாவது: இந்த விசாரணையின் மூலம் அரவிந்த் கேஜரிவால் குழுவின் மற்றொரு மோசமான முகம் விரைவில் வெளிச்சத்துக்கு வரும். சிறைத்துறை அமைச்சராக இருந்த சத்யேந்தா் ஜெயின், திகாா் மற்றும் பிற தில்லி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளை மிரட்டி பணம் பறிக்கும் மோசடியை எப்படி நடத்தினாா் என்பதை விரைவில் நாம் பாா்ப்போம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.