துவாரகாவில் உள்ளூா் கோயிலில் தீ விபத்து
துவாரகாவின் பிந்தாபூா் பகுதியில் 20 ஆண்டுகள் பழைமையான உள்ளூா் கோயிலில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
தில்லி துவாரகாவின் பிந்தாபூா் பகுதியில் 20 ஆண்டுகள் பழைமையான நந்தா தேவி கோயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, தீயணைப்பு துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து மேற்கொண்ட நடவடிக்கையில், உயிா் சேதம் ஏதுமில்லாமல் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது. இது தொடா்பாக மூத்த காவல் அதிகாரி ஒருவது கூறியது,
‘ ஃபைபா் தகடுகளால் இந்த கோயில் அமைக்கப்பட்டுள்ளது. குற்றப்பிரிவு போலீஸாா் மற்றும் தடயவியல்
துறையினா் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளனா்.கோயிலில் இருந்த கடவுள் சிலைகள் அனைத்தும்
தீக்கரையாகிவிட்டன. இந்தத் தீ விபத்திற்கான சரியான காரணத்தை கண்டறியும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
முதல்கட்ட விசாரணையில், ஃபைபா் தகடுகளில் தான் தீப்பிடித்துள்ளது. எவருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை’ என்றாா் அந்த மூத்த அதிகாரி.