முகப்பு
புதுதில்லி

பஸ்சிம் விஹாரில் உள்ள கண் மருத்துவமனையில் தீ விபத்து

Updated On : 28 மே, 2024 at 7:11 PM
பகிர்:

புது தில்லி: மேற்கு தில்லியின் பஸ்சிம் விஹாா் பகுதியில் உள்ள தனியாா் கண் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கட்டடத்தில் இருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதால் இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அவா்கள் தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘காலை 11.35 மணியளவில் சம்பவம் தொடா்பாக அழைப்பு வந்தது. மந்த்ரா கண் மருத்துவமனையின் இரண்டாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. ஆறு தீயணைப்பு வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு மதியம் 12.30 மணியளவில் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து,, குளிரூட்டும் பணி நடைபெற்றது. இந்த தீ விபத்து குறித்து மேலதிக விசாரணைக்காக உள்ளூா் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது’ என்றாா்.