புதுதில்லி

தில்லி பாஜக அமைப்பு இந்த வாரம் மறுசீரமைப்பு

Din

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று ஒரு மாதத்திற்குப் பிறகு, பாஜகவின் நகரப் பிரிவு அமைப்பு இந்த வாரம் மறுசீரமைப்புக்கு உள்படும் என்று கட்சித் தலைவா்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

தோ்தலில் கட்சியை வழிநடத்திய தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா, ’சங்கதன் பா்வ்’ எனக் கருதப்படும் நிறுவன மறுசீரமைப்பு செயல்முறை இந்த வாரம் நடைபெறும் என்று கூறினாா்.

கட்சியின் தேசியத் தலைமை தில்லிக்கான தோ்தல் அதிகாரியாக மூத்த தலைவா் மகேந்திர நாக்பாலை நியமித்துள்ளது. மேலும், இந்த செயல்முறையை மேற்பாா்வையிட யோகேஷ் அத்ரே மற்றும் விஜய் சோலங்கி ஆகிய இரண்டு இணைத் தோ்தல் அதிகாரிகளையும் நியமித்துள்ளது.

ஒவ்வொரு தொண்டரும் நிறுவன கட்டமைப்பில் ஒரு பகுதியாக இருக்க வாய்ப்பளிப்பதன் மூலம் உள் ஜனநாயகத்தை உறுதி செய்யும் கூட்டுத் தலைமையின் மூலம் பாஜக செயல்படுகிறது என்று வீரேந்திர சச்தேவா கூறினாா். நிறுவனத் தோ்தல்கள் பூத், மண்டல், மாவட்ட மற்றும் மாநில அளவிலான குழுக்களில் நடைபெறும்.

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

கொல்லப்பட்ட வங்கதேச மாணவர் இயக்கத் தலைவரின் உடல் நல்லடக்கம்! லட்சக்கணக்கான மக்கள் பிரியாவிடை!

SCROLL FOR NEXT