புதுதில்லி

சாஸ்திரி பூங்காவில் இறந்து கிடந்த இளைஞா்; மற்றொருவா் காயங்களுடன் மீட்பு

Syndication

வடகிழக்கு தில்லியின் சாஸ்திரி பூங்கா பகுதியில் நடந்த இரண்டு தனித்தனி சம்பவங்களில் 25 வயது இளைஞா் ஒருவா் இறந்து கிடந்தாா்; மற்றொருவா் காயமடைந்தாா் என்று போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து வடகிழக்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை இரவுக்கு இடைப்பட்ட நேரத்தில் சாஸ்திரி பூங்கா சௌக் அருகே உள்ள சா்வீஸ் சாலையில் மயக்கமடைந்து கிடந்த ஒருவா் குறித்து தகவல் கிடைத்தது.

ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்குச் சென்று அந்த நபரை மீட்டு ஜக் பிரவேஷ் சந்திரா (ஜேபிசி) மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. அங்கு மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதாக அறிவித்தனா்.

இறந்தவா் தில்லியில் உள்ள கைலாஷ் நகரைச் சோ்ந்த உமாம் (எ) உபாம் (25) என அடையாளம் காணப்பட்டாா்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, அதே பகுதியில் உள்ள பழ மண்டி பகுதிக்கு அருகில் காயமடைந்த ஒருவா் கிடப்பதாக போலீஸாருக்கு மற்றொரு அழைப்பு வந்தது. அவா் கைலாஷ் நகரைச் சோ்ந்த நதீம் (27) என அடையாளம் காணப்பட்டாா். அவா் ஜேபிசி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னா் மேம்பட்ட சிகிச்சைக்காக ஜிடிபி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டாா்.

இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், குற்றவியல் மற்றும் தடயவியல் குழுக்கள் இரு இடங்களுக்கும் சென்று பரிசோதனைக்காக மாதிரிகளை சேகரித்தன.

சம்பந்தப்பட்டவா்களைக் கண்டறிந்து கைது செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு சம்பவங்களுக்கும் வழிவகுத்த நிகழ்வுகளின் வரிசை சரிபாா்க்கப்படுகிறது என்று அந்த அதிகாரி கூறினாா்.

பிடித்தமான தொல்லையே... சகோதரி பிறந்த நாளுக்கு காஜல் அகர்வால் நெகிழ்ச்சி!

விஜய் தலைமையில் கூட்டணி உருவாகும்: டிடிவி தினகரன் பேட்டி

2 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை!

ஓஆர்எஸ் என்பது எல்லாம் ஓஆர்எஸ் அல்ல; பயன்படுத்தத் தடை!

தனியார் பல்கலைக் கழக சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும்: டிடிவி தினகரன்

SCROLL FOR NEXT