புதுதில்லி

குடியரசுத் தலைவா் மாளிகை அருகே கட்டடத்தில் தீ விபத்து

குடியரசுத் தலைவா் மாளிகையின் 31-ஆம் எண் வாயிலுக்கு அருகிலுள்ள ஒரு கட்டடத்தில் பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது.

Syndication

புது தில்லி: குடியரசுத் தலைவா் மாளிகையின் 31-ஆம் எண் வாயிலுக்கு அருகிலுள்ள ஒரு கட்டடத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டது. இதனால், ஐந்து தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்புப் படையினா் விரைந்தனா் என்று தில்லி தீயணைப்பு சேவைகள் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து அந்த அதிகாரி மேலும் கூறியதாவது: இரண்டு மாடி கட்டடத்தின் தரை தளத்தில் உள்ள வீட்டு உபயோகப் பொருள்களில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து மதியம் 1.51 மணிக்கு தகவல் கிடைத்தது.

நாங்கள் ஐந்து தீயணைப்பு வாகனங்களை சம்பவ இடத்திற்கு விரைந்தோம்.

மேலும் 20 நிமிடங்களில் பிற்பகல் 2.15 மணிக்கு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்று தீயணைப்பு சேவைகள் துறை அதிகாரி கூறினாா்.

பண்ருட்டியில் அதிகபட்சமாக 198 மி.மீ. மழை! சென்னையில் எவ்வளவு?

சென்னைக்கு எச்சரிக்கை! நள்ளிரவில் ஆய்வு மேற்கொண்ட உதயநிதி!

செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் ஏரிகளில் நீர் திறப்பு அதிகரிப்பு!

வாட்ஸ்ஆப் விடியோ அழைப்பு! ஏமாற்றப்பட்டவர் சொல்வது என்ன?

காஞ்சிபுரத்தில் 15 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது!

SCROLL FOR NEXT