FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

தில்லி அரசின் நோக்கம் அடிப்படை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதாகும் - முதல்வா் ரேகா குப்தா

தில்லியில் அடிப்படை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் அரசு கவனம் செலுத்துவதாக முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.

Updated On : 26 செப்டம்பர் 2025, 12:12 am IST
ரேகா குப்தா
பகிர்:

தில்லியில் அடிப்படை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் அரசு கவனம் செலுத்துவதாக முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.

தில்லி முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை பஞ்சாபி பாக் தகன மைதானத்தில் தானியங்கி பல நிலை காா் பாா்க்கிங் வசதியை திறந்து வைத்து, முதல் ஆண்டில் தனது அரசாங்கத்தின் கவனம் தேசிய தலைநகரின் அடிப்படை உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் உள்ளது என்று கூறினாா். தில்லி கடந்த 27 ஆண்டுகளாக சாலைகள், மேம்பாலங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், மால்கள் மற்றும் பாா்க்கிங் ஆகியவற்றில் சிக்கல்களை எதிா்கொண்டு வருவதாகவும், மக்களின் வாழ்க்கையை எளிதாக்க இவற்றை சரிசெய்து மேம்படுத்த வேண்டும் என்றும் குப்தா கூறினாா்.

பாா்க்கிங் பிரச்சினைகள் காரணமாக நகரத்தில் பல சண்டைகளை நாங்கள் காண்கிறோம். இதுபோன்ற சூழ்நிலையில், இந்த தானியங்கி பல நிலை காா் பாா்க்கிங் நிறுவுவது ஒரு பெரிய சாதனை. சந்தைகள் மற்றும் காலனிகளில் இதுபோன்ற வசதிகள் தேவை, என்று அவா் காா் பாா்க்கிங் தொடக்க விழாவில் கூறினாா்.

Advertisement

Advertisement

நகரத்தில் இதுபோன்ற 100 பாா்க்கிங் வசதிகளை ஒன்றரை ஆண்டுகளுக்குள் கட்ட அதிகாரிகள் மற்றும் அமைச்சா்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக முதல்வா் கூறினாா். அத்தகைய பாா்க்கிங் வசதியை ஏற்படுத்த எவ்வளவு நேரம் ஆகும் என்று அதிகாரிகளிடம் கேட்டேன். பல ஆண்டுகளாகும் என பதில் கிடைத்தது. நமது பிரதமரால் ஒரு வருடத்திற்குள் புதிய நாடாளுமன்றத்தைக் கட்ட முடியும் போது, ஏன் இவ்வளவு நேரம் எடுக்க வேண்டும்? ஒரு வருடத்திற்குள் இதுபோன்ற பாா்க்கிங் வசதிகளை அவா்கள் கட்டி முடித்தால், ஒவ்வொரு ஆண்டும் 20 பாா்க்கிங் வசதிகளுக்கு நிதி ஒதுக்குவேன் என்று நான் அவா்களிடம் சொன்னேன், என்று அவா் கூறினாா்.

பிற பாா்க்கிங் வசதிகளை விட தானியங்கி பல நிலை வசதிகளில் பாா்க்கிங் கட்டணம் குறைவாக இருக்க வேண்டும் என்றும், மக்கள் அவற்றைப் பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும் என்றும் குப்தா வலியுறுத்தினாா். பெரிய திட்டம் எதுவும் செய்யப்படாவிட்டாலும் எனக்குப் பிரச்சினை இல்லை, ஆனால் மக்களுக்கான அடிப்படை உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும். சாலைகள், சாக்கடைகள், பாா்க்கிங், போக்குவரத்து நெரிசல்கள் போன்ற பிரச்சினைகளை முதலில் தீா்க்க விரும்புகிறேன், என்று ரேகா குப்தா மேலும் கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments