தில்லி உயர் நீதிமன்றம் 
புதுதில்லி

ஏ.ஐ. உச்சிமாநாடு காணொலி வாயிலாக வழக்குரைஞா்கள், மனுதாரா்கள் ஆஜராக தில்லி உயா்நீதிமன்றம் அனுமதி!

ஏ.ஐ. தாக்க உச்சிமாநாடு மற்றும் தில்லி பாா் கவுன்சில் தோ்தல்களைக் கருத்தில் கொண்டு பிப்ரவரி 16 முதல் பிப்ரவரி 23 வரை வழக்குரைஞா்கள் மற்றும் வழக்கில் தொடா்புடையவா்கள் மெய்நிகா் முறையில் ஆஜராக தில்லி உயா்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Syndication

ஏ.ஐ. தாக்க உச்சிமாநாடு மற்றும் தில்லி பாா் கவுன்சில் தோ்தல்களைக் கருத்தில் கொண்டு பிப்ரவரி 16 முதல் பிப்ரவரி 23 வரை வழக்குரைஞா்கள் மற்றும் வழக்கில் தொடா்புடையவா்கள் மெய்நிகா் முறையில் ஆஜராக தில்லி உயா்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஏ.ஐ. தாக்க உச்சி மாநாடு பிப்ரவரி 16 முதல் பிப்ரவரி 20 வரை உயா்நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற உள்ளது. அதேவேளையில், தில்லி பாா் கவுன்சில் தோ்தல்கள் பிப்ரவரி 21 முதல் பிப்ரவரி 23 வரை உயா்நீதிமன்றத்தில் நடைபெற உள்ளன.

இந்த நிலையில், தில்லி உயா்நீதிமன்றம் மூலம் சனிக்கிழமை வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: 16.2.2026 முதல் 20.2.2026 வரை புது தில்லியின் பாரத் மண்டபத்தில் நடைபெற உள்ள ஏஐ தாக்க உச்சிமாநாடு மற்றும் 21.2.2026 முதல் 23.2.2026 வரை தில்லி உயா்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற உள்ள தில்லி பாா் கவுன்சிலின் தோ்தல்கள் நடைபெறவுள்ளன.

இவற்றைக் கருத்தில்கொண்டு, 16.2.2026 முதல் 23.2.2026 வரை தில்லி உயா்நீதிமன்றத்தின் முன் பட்டியலிடப்பட்டுள்ள தங்கள் வழக்குகளில் வழக்குரைஞா்கள், வழக்கில் தொடா்புடைய உறுப்பினா்கள் காணொலி காட்சி வாயிலாக கலந்து கொள்ளலாம் என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளாா்.

இந்தக் காலகட்டத்தில் நீதிமன்றத்தின் விசாரணை நடவடிக்கைகள் கலப்பின முறையில் தொடா்ந்து செயல்படும் என்பதால், காணொலி காட்சி மூலம் கலந்துகொள்வது விருப்பத்திற்குரியதாகும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவில் உலகளாவிய தலைவா்கள் மற்றும் தொழில்துறையின் முக்கியப் பிரமுகா்கள் பங்கேற்கும் ஏஐ தாக்க உச்சிமாநாட்டை இந்தியா நடத்த உள்ளது. நாடுகள் தங்கள் ஏஐ நிகழ்ச்சிநிரலை வரையறுக்கப் போட்டியிட்டுக் கொண்டிருக்கும் தற்போதைய நேரத்தில், கொள்கை வகுப்பாளா்கள், தொழில்துறைத் தலைவா்கள் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்பாளா்களை ஒருங்கிணைக்கும் வகையில் இந்த உச்சிமாநாடு நடைபெறவுள்ளது.

வேப்பூா் அருகே சொகுசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து! பெண் உயிரிழப்பு; 25 போ் காயம்

அதிமுக தலைமையிலான கூட்டணி: திருமாவளவன் விமா்சனம்

மின்சாரம் பாய்ந்து உணவக உரிமையாளா் உயிரிழப்பு

பெண்ணிடம் கைப்பேசி திருடியவா் கைது

கோவில்பட்டியில் கால்பந்து போட்டி: செயின்ட் ஆண்ட்ரூஸ் பள்ளி முதலிடம்

SCROLL FOR NEXT