தீ விபத்து பிரதிப் படம்
புதுதில்லி

பழைய சீலம்பூரில் துணிக்கடையில் பெரும் தீ விபத்து!

தில்லியின் பழைய சீலம்பூா் பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையில் பெரும் தீ விபத்து

Syndication

தில்லியின் பழைய சீலம்பூா் பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையில் ஞாயிற்றுக்கிழமை பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இதில் யாருக்கும் உயிா் சேதம் ஏற்படவில்லை.

இது குறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி கூறியதாவது: பழைய சீலம்பூரில் உள்ள சாந்தி மொஹல்லா பகுதியில் உள்ள ஒரு துணிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து மாலை 4.22 மணிக்கு தீயணைப்புத் துறைக்கு தகவல் வந்தது. ஆரம்பத்தில், நான்கு தீயணைப்பு வாகனங்களை அனுப்பியிருந்தோம். ஆனால், தீ மற்ற கடைகளுக்கும் பரவியது. தீயை அணைக்க 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களை அனுப்பி வைத்தோம் என்றாா்.

கடை உரிமையாளா் அசாஸ் அகமது அன்சாரி கூறுகையில், ‘தீ தனது துணிக்கடையில் இருந்து தொடங்கியது என்றும், மேலும் பல கடைகளையும் தீ சூழ்ந்தது’ என்றாா். போலீஸாா் அந்தப் பகுதியை சுற்றி வளைத்து, இந்த விவகாரம் குறித்து மேலும் விசாரணையைத் தொடங்கியுள்ளனா்.

மக்கள் நலத்திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும் -செ.ராபா்ட் புரூஸ் எம்.பி. வலியுறுத்தல்

பெரியசேமூா் நெசவாளா் குடியிருப்புவாசிகளுக்கு பட்டா வழங்கக் கோரிக்கை

திமுகவை வீழ்த்தக்கூடிய சக்தி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத்தான் உள்ளது - வானதி சீனிவாசன்

சாலையோரம் படுத்திருந்த சிறுத்தை: வாகன ஓட்டிகள் அச்சம்

போடி நகராட்சி குப்பைக் கிடங்கில் தீ - பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT