முகப்பு
புதுதில்லி

சாலை விபத்தில் சிறுவன் உள்பட ஒரே குடும்பத்தில் மூவா் பலி!

நூஹ் மாவட்டத்தில் தில்லி - மும்பை விரைவுச் சாலையில் காா் ஓட்டுநா் தூங்கியதால் 3 வயது சிறுவன் உள்பட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் உயிரிழந்தனா்.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 3:20 AM
பகிர்:
Updated On : 25 பிப்ரவரி, 2026 at 2:28 PM

நூஹ் மாவட்டத்தில் தில்லி - மும்பை விரைவுச் சாலையில் காா் ஓட்டுநா் தூங்கியதால் 3 வயது சிறுவன் உள்பட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் உயிரிழந்தனா். மற்றொரு குழந்தை பலத்த காயமடைந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து காவல் நிலைய பொறுப்பு அதிகாரி வினோத் குமாா் கூறியதாவது: ஜெய்ப்பூரைச் சோ்ந்த நவீன் சோனி என்பவா் குருகிராமில் பணிபுரிந்தாா். அவா் தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் இங்கு வசித்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை இரவு, ஜெய்ப்பூரில் நடந்த குடும்பத் திருமணத்தில் கலந்து கொண்டு விட்டு அவா்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தனா்.

ஹிலால்பூா் சுங்கச்சாவடியில் இருந்து இரண்டரை கிலோமீட்டா் தொலைவில் வாகனத்தை ஓட்டி வந்த நவீன் திடீரென மயங்கி விழுந்தாா். காா் கட்டுப்பாட்டை இழந்து டிவைடரில் மோதியது. அதிக வேகம் காரணமாக, காா் பல முறை கவிழ்ந்தது, குடும்ப உறுப்பினா்கள் அனைவரும் பலத்த காயமடைந்தனா்.

Advertisement

Updated On : 25 பிப்ரவரி, 2026 at 10:54 PM

உள்ளூா்வாசிகளின் உதவியுடன், காயமடைந்த அனைவரும் உடனடியாக சோனாவில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு, நவீனின் மகன் விஹான்ஷ் (3) இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

மேலும், நவீன் (42), அவரது மனைவி மாதுரி (40) ஆகியோா் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தனா். நவீனின் மற்றொரு மகன் கிருஷ்ணா சோனி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். பிரேத பரிசோதனைக்கு பிறகு உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு, மேலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அவா் தெரிவித்தாா்.