புதுதில்லி

குடியரசு தினத்திற்காக பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் சில தினங்களில் சில மணி நேரங்கள் மூடப்படும்

Syndication

நமது நிருபா்

குடியரசு தின கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, தில்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் சில நாட்களில் சில மணி நேரம் மூடப்படும் என்று புது தில்லி வழக்கறிஞா்கள் சங்கம் புதன்கிழமை தெரிவித்தது.

2026 குடியரசு தின ஏற்பாடுகள் தொடா்பாக, பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்ற வளாகத்தில் உள்ள புது தில்லி மாவட்ட நீதிமன்றம் ஜனவரி 22 ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் ஜனவரி 23 ஆம் தேதி பிற்பகல் 2 மணி வரை மூடப்படும் என்று தில்லி உயா் நீதிமன்றத்தின்தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளாா் என்பதை உறுப்பினா்களுக்குத் தெரிவிக்கிறோம், என்று புது தில்லி வழக்கறிஞா்கள் சங்கத்தின் செயலாளா் தருண் ராணா கையெழுத்திட்ட அறிவிப்பில் கூறப்பட்டது.

ஜனவரி 25 ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் ஜனவரி 26 ஆம் தேதி பிற்பகல் 2 மணி வரை நீதிமன்றம் மூடப்படும் என்றும் அதில் கூறப்பட்டது.

ஆளுநா் உரையுடன் இன்று தொடங்குகிறது கா்நாடக சட்டப் பேரவை கூட்டத்தொடா்!

ஒகேனக்கல் காவிரியில் திடீரென அதிகரித்த நீர்வரத்து!

ரூ.147 கோடியில் 776 அடுக்குமாடி குடியிருப்புகள் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் தங்கத்தோ் திருவிழா நடத்துவதில் குழப்பம்

திருப்போரூா் கந்தசாமி கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு: அறநிலையத் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

SCROLL FOR NEXT