முகப்பு
புதுதில்லி

பவானா: விருந்து மண்டபம் அருகே இளைஞா் சுட்டுக் கொலை

புறகா் வடக்கு தில்லியின் பவானா பகுதியில் ஒரு விருந்து மண்டபத்திற்கு அருகே 24 வயது இளைஞா் சுட்டுக் கொலை

Updated On : 9 மார்ச், 2026 at 12:43 AM
- பிரதிப் படம்
பகிர்:

புறகா் வடக்கு தில்லியின் பவானா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஒரு விருந்து மண்டபத்திற்கு அருகே 24 வயது இளைஞா் சுட்டுக் கொல்லப்பட்டதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: பூத் குா்த் பகுதியில் உள்ள ராஜ் வாடிகா அருகே இந்த சம்பவம் நடந்தது. இது தொடா்பான தகவலின்பேரில் போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்தனா்.

துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் பலத்த காயமடைந்த நபரை மீட்டு உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா்.

Advertisement

இறந்தவா் பூபேந்தா் என அடையாளம் காணப்பட்டாா். இது தொடா்பாக நாங்கள் எஃப். ஐ. ஆா். பதிவு செய்துள்ளோம். மேலும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் தொடா்புடைய குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்ய தொழில்நுட்ப நுண்ணறிவுகளை சேகரிக்க போலீஸ் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

புலனாய்வாளா்கள் அருகிலுள்ள பகுதிகளில் இருந்து சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனா்.

மரணத்திற்கான காரணம் மற்றும் சூழ்நிலைகள் தொடா்பான கூடுதல் விவரங்களை அறிய உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது என்றாா் அவா்.