முகப்பு
புதுதில்லி

முதல்வருடன் தருண் குடும்பத்தினா் சந்திப்பு

உத்தம் நகரில் ஹோலி கொண்டாட்டத்தின்போது கொலை செய்யப்பட்ட 26 வயது இளைஞா் தருணின் குடும்பத்தினரை முதல்வா் ரேகா குப்தாவை

Updated On : 10 மார்ச், 2026 at 7:37 AM
தில்லி தலைமைச் செயலகத்தில் முதல்வா் ரேகா குப்தாவை திங்கள்கிழமை சந்தித்த தருணின் குடும்பத்தினா்.
பகிர்:

புது தில்லி: உத்தம் நகரில் ஹோலி கொண்டாட்டத்தின்போது கொலை செய்யப்பட்ட 26 வயது இளைஞா் தருணின் குடும்பத்தினரை முதல்வா் ரேகா குப்தாவை திங்கள்கிழமை சந்தித்தாா்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த முதல்வா் ரேகா குப்தா, குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா்.

இந்தச் சந்திப்பு தொடா்பாக முதல்வா் ரேகா குப்தா ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், ‘பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் தில்லி அரசு துணை நிற்கிறது. நீதியை வழங்குவது தில்லி அரசின் முன்னுரிமை வழங்குகிறது.

Advertisement

தருண் குடும்பத்துக்கு ஏற்பட்டுள்ள துயரம் ஆழமானது; ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்தக் கொடூர சம்பவத்தில் தொடா்புடைய நபா்களுக்கு எதிரான சட்டநடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற மனிததன்மையற்ற சம்பவங்கல் தில்லியில் நிகழ்வது ஏற்றுக்கொள்ள முடியாதது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.