பாரதப் பிரதமர்கள் - அன்று முதல் இன்று வரை
பாரதப் பிரதமர்கள் - அன்று முதல் இன்று வரை; குன்றில்குமார்; பக். 240; ரூ.240; அழகு பதிப்பகம், சென்னை -49: 044-26502086.
முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு முதல் இன்றைய பிரதமர் நரேந்திர மோடி வரையிலான 15 பேர் குறித்த தகவல்களை இந்நூல் சுருக்கமாக விவரிக்கிறது.
1952-இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பெரோஸ் காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவது குறித்து விவாதிக்காதது நேருவுக்கு சற்று கோபத்தை ஏற்படுத்தியது.
இந்திரா காந்தி பிரதமராக பதவி வகித்தபோது முதன்முதலில் அணுகுண்டு சோதனை செய்தது, காலிஸ்தான் பிரச்னையை அவர் கையாண்ட விதம், அவசரநிலை அறிவிக்கப்பட்டது
உள்ளிட்ட நிகழ்வுகளும், ஒவ்வொரு பிரதமரும் எடுத்த முக்கிய முடிவுகளும் இதில் கவனம் பெற்றுள்ளன.
மிகச் சாதாரண நிலையிலிருந்து குஜராத் முதல்வராகவும், 15-வது பிரதமராகவும் உயர்ந்திருக்கும் நரேந்திர மோடியின் நிர்வாகத் திறமையையும் இந்த நூல் பட்டியலிட்டுள்ளது.
முதல் குடிமகனாக குடியரசுத் தலைவர் இருந்தாலும், பிரதமரின் முடிவுக்கு இசைவு தெரிவிப்பது மட்டுமே அவரது பணி. அரசியல் சாசனத்தின்படி, முப்படைகளின் தளபதியாக குடியரசுத் தலைவர் இருந்தாலும் உண்மையான அதிகாரம் பிரதமரிடமே உள்ளது. அரசின் வெற்றி, தோல்விகளுக்கு பிரதமரே பொறுப்பு என்பது உள்ளிட்ட மேலதிகமான தகவல்களையும் நூல் பதிவு செய்துள்ளது.