முகப்பு
நூல் அரங்கம்

இந்த ஆயுதங்களால்தான்

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:15 AM
பகிர்:

இந்த ஆயுதங்களால்தான் - அமர்காந்த் (தமிழாக்கம் - கிருஷாங்கினி); பக்.1,057; ரூ.1,330; சாகித்திய அகாதெமி, சென்னை-18; ✆ 044-24311741.

சாகித்திய அகாதெமி விருது பெற்ற 'இன்ஹின் ஹத்தியாரோன் சே' எனும் ஹிந்தி மொழியில் வெளியான நாவலை கிருஷாங்கினி தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.  தனது சொந்த ஊரான உத்தரபிரதேச மாநிலத்தின் பலியா எனும் பின்தங்கிய கிராமத்தில் உள்ள மக்களிடம் இருந்த சுதந்திரப் போராட்டத் தாக்கத்தை நாவலாசிரியர் சிறப்பாகப் பதிவுசெய்துள்ளார்.

இந்த நாவல் 1942-இல் நடைபெற்ற 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தின் போது பலியாவுக்கு பத்து நாள் சுதந்திரம் கிடைக்கிறது. காந்தி, நேரு  போன்ற தலைவர்கள் நேரடியாக கலந்து கொள்ளாமல் அவர்களின் அஹிம்சை, சத்யாகிரகம், ஒத்துழையாமை எனும் தத்துவத்தை கொண்டு மக்கள் போராடினர்.  பத்து நாள்களில் மக்கள் ஒருவருக்கொருவர் ஒற்றுமையுடன் இருந்தனர். பின்னர் ஆங்கிலேய ராணுவப்படை சுதந்திரத்தை பறிக்கிறது. இருந்தாலும், இந்தச் சுதந்திரத் தாகம் போராட்டக்காரர்களிடமிருந்து அனைத்து மக்களிடமும் தொற்றிக் கொள்கிறது.

இதோடு அந்த  காலகட்டத்தில் இருந்த சமூக அமைப்பை அழகாக படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். குறிப்பாக கல்வி, பெண் விடுதலை உள்ளிட்ட சமூக விடுதலையை முன்னிறுத்தியுள்ளார். 

டேலா, நம்ரதா, பகஜோகினி உள்ளிட்ட பெண் கதாபாத்திரங்கள் கதையில் உயிரோட்டமாக வந்து செல்கின்றனர்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தையும் அது கடைக்கோடி மக்கள் வரை ஏற்படுத்திய தாக்கத்தையும் அகிம்சை எனும் ஆயுதத்தைக் கொண்டு தான் சுதந்திரத்தை பெற முடியும் என்பதையும் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார் அமர்காந்த். 

முழு கட்டுரையைப் படிக்க →