முகப்பு
நூல் அரங்கம்

சாதி ஒழிப்பில் கம்யூனிஸ்ட்டுகள் சாதித்தது என்ன?

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:14 AM
பகிர்:

சாதி ஒழிப்பில் கம்யூனிஸ்ட்டுகள் சாதித்தது என்ன? - இரா. பாரதிநாதன்; பக். 112; ரூ.145, புரட்சி பாரதி பதிப்பகம், ஆவடி, சென்னை 55; ✆ 90430 50666.

சாதி ஒழிப்புக்காக கம்யூனிஸ்ட்டுகள் எதுவும் செய்ததில்லை என்பதைப் போல அண்மைக் காலமாக திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் போன்ற சிலர் பேசிவருவதற்குப் பதிலளிப்பதாக வெளிவந்திருக்கிறது இந்த நூல்.

சாதி - பண்ணையடிமைத்தன ஒழிப்பிலும் கம்யூனிஸ்ட்டுகள் என்னென்ன இன்னல்களைக் கடந்திருக்கிறார்கள், எத்தனை உயிர்களை இழந்திருக்கிறார்கள் என்பதைக் கோடிட்டுக் காட்டும் வகையில் வரலாற்றின் பல்வேறு காலங்களையும் நிகழ்வுகளையும் எழுதியிருக்கிறார் ஆசிரியர்.

இவ்வாறு பேசும் அம்பேத்கரிஸ்டுகளைத் தவறான பிரசாரத்தை நம்பிப் பேசுவோர், திட்டமிட்டே பொய்யான பிம்பத்தைக் கட்டமைக்க விரும்புவோர் என வகைப்படுத்தி அம்பலப்படுத்தும் நூல்.

பகத் சிங்கில் தொடங்கி, தெலங்கானாவில் பொட்டுக்கட்டிய பெண்களை மணந்துகொண்ட கம்யூனிஸ்ட்டுகள், ஸ்ரீகாகுளம் உழவர் போராட்டம் எனத் தொடருகிறது நூல்.

பிராமணரான கம்யூனிஸ்ட்  பி. சீனிவாசராவ் எவ்வாறு கீழத் தஞ்சை மாவட்டத்தில் மாபெரும் புரட்சிக்குக் காரணமானார்? சாணிப்பாலும் சவுக்கடியும் எவ்வாறு ஒழிந்தது, தாழ்த்தப்பட்டோர் எவ்வாறு தலைநிமிர்ந்தார்கள் என்பது விரிவாகக் கூறப்படுகிறது.

பி.சீனிவாசராவ் வரிசையில் தாழ்த்தப்பட்டோர் பக்கம் நின்று தன் சாதியினரையே எதிர்த்த வாட்டாக்குடி இரணியன், சாம்பவானோடை சிவராமன், ஏ.எம். கோபு என இன்னும்  குறிப்பிடப்பட வேண்டிய எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.

நக்சல்கள் பரவலும் கோபாலகிருஷ்ண நாயுடு கொலையும், தருமபுரி சாதியொழிப்பில் தீவிரவாத இளைஞர்களின் முன்னெடுப்புகள், அழித்தொழிப்புகள், தமிழரசன், கலியபெருமாள் செயல்பாடுகள் எனச் செல்கிறது நூலின் பதிவுகள். மேலும் கூடுதலான நிகழ்வுகளையும் தரவுகளையும் சேர்த்து, இன்னும் விரிவாக எழுதுவதற்கு ஆதாரமான இந்த நூல், இன்றைய காலகட்டத்தில் அனைவரும் படித்தறிய வேண்டிய ஒன்று.

முழு கட்டுரையைப் படிக்க →