முகப்பு
நூல் அரங்கம்

கழுகுகளின் காடு

Updated On : 4 செப்டம்பர், 2023 at 7:20 PM
பகிர்:

கழுகுகளின் காடு - சந்துரு; பக்.208; ரூ.240;  கிழக்கு பதிப்பகம், சென்னை -14; ✆ 044-42009603.

இந்தியாவில்  உள்ள 9 கழுகு இனங்களில் நான்கு இனங்கள் நீலகிரி - ஈரோட்டுக்கு இடையேயான மோயாறுப் பள்ளத்தாக்கில் காணப்படுகின்றன.   இவை குறித்து 20 ஆண்டுகளாக நூலாசிரியர் மேற்கொண்ட ஆய்வு, பல்வேறு வகையான பயண அனுபவங்களின் தொகுப்பே இந்நூல்.

வனம் பாதுகாக்கப்பட்டால்தான் உருவத்தில் பெரியதான வன விலங்குகள் பெருகும்.  இவ்விலங்குகள் இறக்கும்போது மாமிச உண்ணிகளான கழுகுகளின் எண்ணிக்கையும் பெருகும். ஆனால், இறந்த விலங்குகளை விஷமிடுவது, வனப்பகுதிகளில் கால்நடைகள் வளர்ப்பது குறைந்தது, அதிகமாக வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்கள், பழங்குடிகளை வனச் சூழலில் இருந்து அகற்றியது உள்ளிட்ட சில காரணங்களால் மோயாறுப் பள்ளத்தாக்கில் கழுகுகள் அறவே குறைந்தன என நூலாசிரியர் வருந்துகிறார்.

Advertisement

பழங்குடிகள், வன அலுவலர்கள், சர்வதேச கழுகு பாதுகாப்பு அமைப்பினர் உள்ளிட்டோருடன் நூலாசிரியருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் வனம், வன உயிரினங்கள், பறவைகள் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை வெளிப்படுத்துகின்றன.

கழுகுகள் குறித்த கள ஆய்வில் 100% சரியாக கணிக்க முடியாது என்பதே உண்மை என்று நூலாசிரியர் பதிவு செய்திருப்பதிலிருந்து கள ஆய்வுப்பணி எத்தனை கடினமானது என்பதை உணர முடிகிறது.

புவி அனைத்து உயிர்களுக்கும் உரியது; மனிதனின் பேராசையால் பல்வேறு உயிரினங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. அதில் கழுகினமும் அடக்கம் என்பதை இந்நூல் உணர்த்துகிறது.  வன ஆர்வலர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.