முகப்பு
நூல் அரங்கம்

ம. சிங்காரவேலரின் அறிவியல் சிந்தனைகள்

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:15 AM
பகிர்:

ம. சிங்காரவேலரின் அறிவியல் சிந்தனைகள் - த. ஸ்டாலின் குணசேகரன்; பக். 80; ரூ. 80; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை - 50; ✆ 044 - 26251968.

தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் என்றறியப்படும் ம.சிங்காரவேலரைப் பற்றி சென்னைப் பல்கலை.யில் நூலாசிரியர் நிகழ்த்திய அறக்கட்டளைச் சொற்பொழிவின் எழுத்து வடிவமே இந்த நூல். காந்தியடிகளைவிட ஒன்பது வயது மூத்தவர், பெரியார் ஈ.வெ.ரா.வைவிட பத்தொன்பது வயது மூத்தவர் சிங்காரவேலர் என்று குறிப்பிட்டுத் தொடங்கும் ஆசிரியர்,

ஒருவரைப் பற்றிய மதிப்பீட்டில் இவற்றை அறிந்திருப்பதும் அவசியம் என மிகச் சரியாகவே குறிப்பிடுகிறார்.

1902-இல் லண்டனில் நடந்த புத்த மத மாநாட்டில் பங்கேற்றதுதான், சுயசிந்தனையாளரான சிங்காரவேலரின் அறிவுத் தேடலுக்குப் புத்தொளி பாய்ச்சியதாகக் குறிப்பிடும் ஆசிரியர், அவருடைய நூலகத்திலிருந்த இருபதாயிரம் நூல்களைப் பற்றி அமீர் ஹைதர்கானின் மேற்கோளுடன் தெரிவிக்கிறார்.

அறிவியலில் ஆழமும் அவற்றைப் பரப்புவதில் இருந்த ஆர்வமும் பற்றிக் குறிப்பிட்டு, அதனால், சிந்தனைச் சிற்பி என அண்ணா குறிப்பிட்டதே பின்னாளில் பட்டத்தைப் போலாகிவிட்டதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிங்காரவேலரின் அறிவியல் எழுத்துகளையும் நூல்களையும் பட்டியலிட்டு, நூலகத்திலிருந்த நூல்களிலும் அவருடைய கட்டுரைகளின் எண்ணிக்கையிலும் பாதிக்கும் மேற்பட்டவை அறிவியல் சார்ந்தவையே என்கிறார். சூரியன்தான் பிரபஞ்சத்தின் நடுநாயகம் என்ற உண்மையைப் பரப்ப அறிவியலாளர் புரூனோ பட்ட பாட்டைப் பதிவு செய்ததுடன், அறிவியலை

எழுதியெழுதி, அறிவியல் உணர்வை, உண்மைகளைத் தமிழ்ச் சமூகத்துக்கு அறிமுகப்படுத்துவதில் சிங்காரவேலரின் பங்களிப்பைச் சிறப்பிக்கிறது நூல். அறிவியல் பரவினால் மூட நம்பிக்கைகள் ஒழியும் என்ற அவருடைய அறிவியல் முகத்தை அறிமுகப்படுத்தும் நல்ல நூல்.

ம. சிங்காரவேலரின் அறிவியல் சிந்தனைகள் - த. ஸ்டாலின் குணசேகரன்; பக். 80; ரூ. 80; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை - 50; ✆ 044 - 26251968.

தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் என்றறியப்படும் ம.சிங்காரவேலரைப் பற்றி சென்னைப் பல்கலை.யில் நூலாசிரியர் நிகழ்த்திய அறக்கட்டளைச் சொற்பொழிவின் எழுத்து வடிவமே இந்த நூல். காந்தியடிகளைவிட ஒன்பது வயது மூத்தவர், பெரியார் ஈ.வெ.ரா.வைவிட பத்தொன்பது வயது மூத்தவர் சிங்காரவேலர் என்று குறிப்பிட்டுத் தொடங்கும் ஆசிரியர்,

ஒருவரைப் பற்றிய மதிப்பீட்டில் இவற்றை அறிந்திருப்பதும் அவசியம் என மிகச் சரியாகவே குறிப்பிடுகிறார்.

1902-இல் லண்டனில் நடந்த புத்த மத மாநாட்டில் பங்கேற்றதுதான், சுயசிந்தனையாளரான சிங்காரவேலரின் அறிவுத் தேடலுக்குப் புத்தொளி பாய்ச்சியதாகக் குறிப்பிடும் ஆசிரியர், அவருடைய நூலகத்திலிருந்த இருபதாயிரம் நூல்களைப் பற்றி அமீர் ஹைதர்கானின் மேற்கோளுடன் தெரிவிக்கிறார்.

அறிவியலில் ஆழமும் அவற்றைப் பரப்புவதில் இருந்த ஆர்வமும் பற்றிக் குறிப்பிட்டு, அதனால், சிந்தனைச் சிற்பி என அண்ணா குறிப்பிட்டதே பின்னாளில் பட்டத்தைப் போலாகிவிட்டதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிங்காரவேலரின் அறிவியல் எழுத்துகளையும் நூல்களையும் பட்டியலிட்டு, நூலகத்திலிருந்த நூல்களிலும் அவருடைய கட்டுரைகளின் எண்ணிக்கையிலும் பாதிக்கும் மேற்பட்டவை அறிவியல் சார்ந்தவையே என்கிறார். சூரியன்தான் பிரபஞ்சத்தின் நடுநாயகம் என்ற உண்மையைப் பரப்ப அறிவியலாளர் புரூனோ பட்ட பாட்டைப் பதிவு செய்ததுடன், அறிவியலை

எழுதியெழுதி, அறிவியல் உணர்வை, உண்மைகளைத் தமிழ்ச் சமூகத்துக்கு அறிமுகப்படுத்துவதில் சிங்காரவேலரின் பங்களிப்பைச் சிறப்பிக்கிறது நூல். அறிவியல் பரவினால் மூட நம்பிக்கைகள் ஒழியும் என்ற அவருடைய அறிவியல் முகத்தை அறிமுகப்படுத்தும் நல்ல நூல்.

முழு கட்டுரையைப் படிக்க →