முகப்பு
நூல் அரங்கம்

அயோத்யா ஸ்ரீ ராமர் கோயில் இயக்கம்

பிரம்மாண்டமான ராமர் கோயில் எழுப்பப்பட்டுள்ள நிலையில், அதன் பின் உள்ள சரித்திரத்தைத் தெளிவாகக் கூறும் நூல்.

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:15 AM
பகிர்:

அயோத்யா ஸ்ரீ ராமர் கோயில் இயக்கம் - பாஜக வெள்ளை அறிக்கை - தொகுப்பு வானமாமலை; பக். 252; ரூ.275; அல்லயன்ஸ், சென்னை-4; 044-24641314.

ராமர் பிறந்த இடத்தில் கோயிலை மீட்பதற்காக 16-ஆம் நூற்றாண்டில் தொடங்கிய போராட்டம் 21-ஆம் நூற்றாண்டில் சட்டபூர்வமாக நிறைவடைந்தது. நாட்டின் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் பிரம்மாண்டமான கோயில் எழுப்பப்பட்டுள்ளது.

பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து அன்றைய மத்திய அரசு ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டது. பின்னர், பாஜகவும் வெள்ளை அறிக்கையை வெளியிட்டது. ஆங்கிலேய ஆட்சிக் கால அரசியல், சமகால அரசியல் பின்புலம் சுருக்கமாக முதல் அத்தியாயத்தில் அலசப்படுகிறது. அடுத்தடுத்த அத்தியாயங்களில் 1980, 90-களின் அரசியல் நிகழ்வுகள், பல்வேறு அமைப்பினரின் மீட்பு முயற்சி நடவடிக்கைகள், சட்டப் போராட்டங்கள் வரிசையாகத் தரப்பட்டுள்ளன.

பாபர் காலத்திலிருந்தே போர் ராஜதந்திரம் மூலம் புனிதத் தலத்தை மீட்கும் முயற்சி.

ஆங்கிலேயர் சட்டபூர்வமாக 1885-இல் தங்கள் ஆட்சியை நிறுவிய காலந்தொட்டு சட்ட நடவடிக்கைகள் மூலம் புனிதத் தலத்தை மீட்கும் முயற்சி, வெகுஜன இயக்கமாக மாறிய மீட்பு முயற்சி என மூன்று கட்டங்களாக நடைபெற்ற போராட்டம் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

ராமஜென்மபூமியில் அமைந்த பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு வழக்கு விவகாரங்கள் பரபரப்பை ஏற்படுத்திய காலகட்டமான 1993-இல் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையில் அனைத்துப் பின்னணி விவரங்களும் 10 அத்தியாயங்களாகத் தரப்பட்டுள்ளன. சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்து இன்று பிரம்மாண்டமான ராமர் கோயில் எழுப்பப்பட்டுள்ள நிலையில், அதன் பின் உள்ள சரித்திரத்தைத் தெளிவாகக் கூறும் நூல்.

அயோத்யா ஸ்ரீ ராமர் கோயில் இயக்கம் - பாஜக வெள்ளை அறிக்கை - தொகுப்பு வானமாமலை; பக். 252; ரூ.275; அல்லயன்ஸ், சென்னை-4; 044-24641314.

ராமர் பிறந்த இடத்தில் கோயிலை மீட்பதற்காக 16-ஆம் நூற்றாண்டில் தொடங்கிய போராட்டம் 21-ஆம் நூற்றாண்டில் சட்டபூர்வமாக நிறைவடைந்தது. நாட்டின் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் பிரம்மாண்டமான கோயில் எழுப்பப்பட்டுள்ளது.

பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து அன்றைய மத்திய அரசு ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டது. பின்னர், பாஜகவும் வெள்ளை அறிக்கையை வெளியிட்டது. ஆங்கிலேய ஆட்சிக் கால அரசியல், சமகால அரசியல் பின்புலம் சுருக்கமாக முதல் அத்தியாயத்தில் அலசப்படுகிறது. அடுத்தடுத்த அத்தியாயங்களில் 1980, 90-களின் அரசியல் நிகழ்வுகள், பல்வேறு அமைப்பினரின் மீட்பு முயற்சி நடவடிக்கைகள், சட்டப் போராட்டங்கள் வரிசையாகத் தரப்பட்டுள்ளன.

பாபர் காலத்திலிருந்தே போர் ராஜதந்திரம் மூலம் புனிதத் தலத்தை மீட்கும் முயற்சி.

ஆங்கிலேயர் சட்டபூர்வமாக 1885-இல் தங்கள் ஆட்சியை நிறுவிய காலந்தொட்டு சட்ட நடவடிக்கைகள் மூலம் புனிதத் தலத்தை மீட்கும் முயற்சி, வெகுஜன இயக்கமாக மாறிய மீட்பு முயற்சி என மூன்று கட்டங்களாக நடைபெற்ற போராட்டம் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

ராமஜென்மபூமியில் அமைந்த பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு வழக்கு விவகாரங்கள் பரபரப்பை ஏற்படுத்திய காலகட்டமான 1993-இல் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையில் அனைத்துப் பின்னணி விவரங்களும் 10 அத்தியாயங்களாகத் தரப்பட்டுள்ளன. சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்து இன்று பிரம்மாண்டமான ராமர் கோயில் எழுப்பப்பட்டுள்ள நிலையில், அதன் பின் உள்ள சரித்திரத்தைத் தெளிவாகக் கூறும் நூல்.

முழு கட்டுரையைப் படிக்க →