மலபார் புரட்சி (முதல் பாகம்)
மலபார் புரட்சி (முதல் பாகம்), செ. திவான்; பக்.208; ரூ.220, நேஷனல் பப்ளிஷர்ஸ், சென்னை-17; ✆ 044-28343385.
மன்னர்களின் வம்சாவளி வரலாறு, வைசிராய்களுக்கு அப்பால் வரலாற்று ஆசிரியர்கள் கவனம் செலுத்துவார்களேயானால், நாட்டின் சுதந்திரத்துக்காகவும், முன்னேற்றத்துக்காவும் நடைபெற்று வந்த போராட்டங்களின் வரலாற்றில் உரிய இடத்தை உன்னத இடத்தை பெற்றவர்களின் வீர, தீர சாகசங்கள் அடங்கிய கருவூலங்களைக் காண முடியும். அந்த வரிசையில் இந்த நூல் சிறப்பிடம் பெறுகிறது.
அரேபிய ஆண்கள் கேரளப் பெண்கள் திருமண உறவால் உருவான 'மாப்பிள்ளா' இனத்தில், முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் யூதர்களும் உண்டு. கேரளத்தில் முஸ்லிம் மாப்பிள்ளாக்கள் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக அஞ்சாது நின்று அயராது போரிட்டு தங்களது இன்னுயிரை அர்ப்பணித்ததை நூலில் விரிவாக பார்க்கலாம்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் இராபர்ட் வில்லியம் டி.எஸ்.கார்ட் ஆஷ்ஷை வீர வாஞ்சிநாதன் 1911-ஆம் ஆண்டு ஜூன் 17-இல் சுட்டுக் கொன்ற வீர வரலாறு சரித்திரத்தில் பேசப்
படுகிறது. அந்தச் சம்பவத்துக்கு 56 ஆண்டுகளுக்கு முன்பே மலபாரில் மாப்பிள்ளாக்களுக்கு எதிரான கொடுமைகள் புரிந்த ஆட்சியர் குனாலியும் கொலை செய்யப்பட்டதும், அவரை கொன்றவர்கள் 12 மைல் தொலைவில் உள்ள கீரவல் அடுத்த தமரசேரி பள்ளிவாசலுக்குச் சென்ற தகவலும் வியப்பூட்டுகிறது.
மலபாரில் மாப்பிள்ளாக்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து திகைப்பூட்டக்கூடிய முறையில் பேரெழுச்சியுடன் போராடியுள்ளதை தேசம் அறிய வேண்டியதே நூலின் நோக்கம். வரலாற்று ஆர்வலர்கள் வாசிக்க வேண்டிய நூல் இது.
மலபார் புரட்சி (முதல் பாகம்), செ. திவான்; பக்.208; ரூ.220, நேஷனல் பப்ளிஷர்ஸ், சென்னை-17; ✆ 044-28343385.
மன்னர்களின் வம்சாவளி வரலாறு, வைசிராய்களுக்கு அப்பால் வரலாற்று ஆசிரியர்கள் கவனம் செலுத்துவார்களேயானால், நாட்டின் சுதந்திரத்துக்காகவும், முன்னேற்றத்துக்காவும் நடைபெற்று வந்த போராட்டங்களின் வரலாற்றில் உரிய இடத்தை உன்னத இடத்தை பெற்றவர்களின் வீர, தீர சாகசங்கள் அடங்கிய கருவூலங்களைக் காண முடியும். அந்த வரிசையில் இந்த நூல் சிறப்பிடம் பெறுகிறது.
அரேபிய ஆண்கள் கேரளப் பெண்கள் திருமண உறவால் உருவான 'மாப்பிள்ளா' இனத்தில், முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் யூதர்களும் உண்டு. கேரளத்தில் முஸ்லிம் மாப்பிள்ளாக்கள் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக அஞ்சாது நின்று அயராது போரிட்டு தங்களது இன்னுயிரை அர்ப்பணித்ததை நூலில் விரிவாக பார்க்கலாம்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் இராபர்ட் வில்லியம் டி.எஸ்.கார்ட் ஆஷ்ஷை வீர வாஞ்சிநாதன் 1911-ஆம் ஆண்டு ஜூன் 17-இல் சுட்டுக் கொன்ற வீர வரலாறு சரித்திரத்தில் பேசப்
படுகிறது. அந்தச் சம்பவத்துக்கு 56 ஆண்டுகளுக்கு முன்பே மலபாரில் மாப்பிள்ளாக்களுக்கு எதிரான கொடுமைகள் புரிந்த ஆட்சியர் குனாலியும் கொலை செய்யப்பட்டதும், அவரை கொன்றவர்கள் 12 மைல் தொலைவில் உள்ள கீரவல் அடுத்த தமரசேரி பள்ளிவாசலுக்குச் சென்ற தகவலும் வியப்பூட்டுகிறது.
மலபாரில் மாப்பிள்ளாக்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து திகைப்பூட்டக்கூடிய முறையில் பேரெழுச்சியுடன் போராடியுள்ளதை தேசம் அறிய வேண்டியதே நூலின் நோக்கம். வரலாற்று ஆர்வலர்கள் வாசிக்க வேண்டிய நூல் இது.