சிப்பாய்ப் புரட்சியில் உயிர்த்தியாகம் செய்த விடுதலை வீரர்கள்
சிப்பாய்ப் புரட்சியில் உயிர்த்தியாகம் செய்த விடுதலை வீரர்கள் - வி.என்.சாமி; பக்.152; ரூ.200; வி.என்.சாமி வெளியீடு, மதுரை-625 012; 96297 61984.
சிப்பாய்ப் புரட்சியில் உயிர்த்தியாகம் செய்த விடுதலை வீரர்கள் - வி.என்.சாமி; பக்.152; ரூ.200; வி.என்.சாமி வெளியீடு, மதுரை-625 012; 96297 61984.
வட இந்தியாவில் பிதூர் சமஸ்தானத்தை ஆட்சி செய்த இரண்டாம் பேஷ்வா மறைவுக்குப் பின்னர் அவருடைய தத்து மகன் நானா சாகிப்புக்கு உதவித் தொகை வழங்க ஆங்கிலேய அரசு மறுத்தது. இதன் காரணமாக, அவர் ஆங்கிலேயர்களை உறவாடி வீழ்த்த முடிவு செய்தார். இந்த நேரத்தில் ஆங்கிலேய சிப்பாய்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் தங்களுக்கு வழங்கப்படவில்லையே என்று இந்திய சிப்பாய்களிடையே மனக்குமுறல்கள் இருந்தன.
ஜாதி, மத ரீதியாகப் பழிவாங்கி வந்த ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக, பாரக்பூர் எனும் இடத்தில் 1857-ஆம் ஆண்டு மார்ச் 29-இல் அணிவகுப்பு மைதானத்துக்கு எல்லைக் கோட்டைத் தாண்டிய நானா சாகிப் ஆங்கிலேயர்களைக் கண்மூடித்தனமாகச் சுட்டு இந்தியச் சுதந்திரப் போரைத் தொடங்கினார். இந்தப் போரை ஆங்கிலேயர்கள் அடக்கி, நூற்றுக்கணக்கான இந்திய வீரர்களைக் கொன்றனர்.
இந்த வரலாற்றையும், அவருக்கு உறுதுணையாக இருந்த அஜிமுல்லா கான், தாந்த்யா தோபே, பாண்டுரங்கராவ் என்கிற ராவ் சாகிப், பகதூர்ஷா, பகீரத்வர்கீர், சர்ஜூபிரசாத் சிங் உள்ளிட்
டோரின் வரலாற்றையும், இதர வீரர்களின் வாழ்க்கைக் குறிப்பையும் விரிவாக எடுத்துரைக்கிறது இந்த நூல். புரட்சிக்குப் பின்னர், அவர்கள் எதிர்கொண்ட சூழல்கள், நீதிமன்ற விசாரணைகளையும், போருக்கு முன்னும் பின்னும் சில ஆண்டுகள் நடைபெற்ற போராட்டங்களையும் நூலாசிரியர் பதிவு செய்துள்ளார்.
வரலாறு, தேச ஆர்வலர்கள் வாசிக்க வேண்டிய நூல் இது.
சிப்பாய்ப் புரட்சியில் உயிர்த்தியாகம் செய்த விடுதலை வீரர்கள் - வி.என்.சாமி; பக்.152; ரூ.200; வி.என்.சாமி வெளியீடு, மதுரை-625 012; 96297 61984.
வட இந்தியாவில் பிதூர் சமஸ்தானத்தை ஆட்சி செய்த இரண்டாம் பேஷ்வா மறைவுக்குப் பின்னர் அவருடைய தத்து மகன் நானா சாகிப்புக்கு உதவித் தொகை வழங்க ஆங்கிலேய அரசு மறுத்தது. இதன் காரணமாக, அவர் ஆங்கிலேயர்களை உறவாடி வீழ்த்த முடிவு செய்தார். இந்த நேரத்தில் ஆங்கிலேய சிப்பாய்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் தங்களுக்கு வழங்கப்படவில்லையே என்று இந்திய சிப்பாய்களிடையே மனக்குமுறல்கள் இருந்தன.
ஜாதி, மத ரீதியாகப் பழிவாங்கி வந்த ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக, பாரக்பூர் எனும் இடத்தில் 1857-ஆம் ஆண்டு மார்ச் 29-இல் அணிவகுப்பு மைதானத்துக்கு எல்லைக் கோட்டைத் தாண்டிய நானா சாகிப் ஆங்கிலேயர்களைக் கண்மூடித்தனமாகச் சுட்டு இந்தியச் சுதந்திரப் போரைத் தொடங்கினார். இந்தப் போரை ஆங்கிலேயர்கள் அடக்கி, நூற்றுக்கணக்கான இந்திய வீரர்களைக் கொன்றனர்.
இந்த வரலாற்றையும், அவருக்கு உறுதுணையாக இருந்த அஜிமுல்லா கான், தாந்த்யா தோபே, பாண்டுரங்கராவ் என்கிற ராவ் சாகிப், பகதூர்ஷா, பகீரத்வர்கீர், சர்ஜூபிரசாத் சிங் உள்ளிட்
டோரின் வரலாற்றையும், இதர வீரர்களின் வாழ்க்கைக் குறிப்பையும் விரிவாக எடுத்துரைக்கிறது இந்த நூல். புரட்சிக்குப் பின்னர், அவர்கள் எதிர்கொண்ட சூழல்கள், நீதிமன்ற விசாரணைகளையும், போருக்கு முன்னும் பின்னும் சில ஆண்டுகள் நடைபெற்ற போராட்டங்களையும் நூலாசிரியர் பதிவு செய்துள்ளார்.
வரலாறு, தேச ஆர்வலர்கள் வாசிக்க வேண்டிய நூல் இது.