படைப்பிலக்கியம்
படைப்பிலக்கியம் - சுப்பிரமணி இரமேஷ்; பக். 192; ரூ. 200; ஆதி பதிப்பகம், திருவண்ணாமலை - 606 806; ✆ 9159933990.
இலக்கியத்தின் முக்கியக் கூறுகளான கதை, கவிதை, நாடகங்களின் தொடக்க கால முயற்சிகள் முதல் இன்றைய வளர்ச்சி வரை சுருக்கமாகவும் தெளிவாகவும் இந்நூலில் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்.
மரபுக்கவிதை குறித்த கட்டுரையில், தொடக்கத்தில் கவிதையானது செய்யுள் என்றே அழைக்கப்பட்டது என்பதைப் புறநானூற்றுப் பாடலின் துணை கொண்டு விளக்கும் இவர், பரிபாடலில்தான் முதல் முதலில் 'கவிதை' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது என்கிறார். பின் கம்பர் 'சான்றோர் கவியென' எனக் கூறியதையும், கவிதைக்கு கவிமணி தரும் விளக்கத்தையும் குறிப்பிடுகிறார். மேலும், கவிதைக்கு இன்றியமையாததாகிய யாப்பிலக்கணத்தையும் தொட்டுக் காட்டியுள்ளார்.
புதுக்கவிதை பகுதியில், தொடக்கத்தில் புதுக்கவிதைக்கு இருந்த ஆதரவையும் எழுந்த எதிர்ப்பையும் சுட்டிக்காட்டியுள்ளார். புதுக்கவிதைக்கு அப்பெயரைச் சூட்டியவர் க.நா.சு. என்பதும், புதுக்கவிதையை எதிர்த்த பண்டிதர்களைச் சாடிய புதுமைப்பித்தனும் புதுக்கவிதை மீது அதிருப்தியே கொண்டிருந்தார் என்பதும் சுவையான செய்திகள்.
சிறுகதை குறித்த பகுதியில், தமிழில் சிறுகதை முயற்சி, அதன் தொடர்ந்த வளர்ச்சி, சிறுகதைக்குத் தேவையான கதைப்பின்னல், பாத்திரத்தேர்வு, முடிவு, தலைப்பு போன்றவற்றையும் விரித்துரைத்துள்ளார். நாடகம் என்கிற பகுதியில், தொடக்க காலத்தில் நாடகத்திலும் நடனத்திலும் பாடல்களே அதிகம் இடம்பெற்றிருந்ததால் இரண்டும் ஒன்றாகவே கருதப்பட்டன என்பதையும், பின் நாடகம் உரைநடை வடிவமாக மாறியதால் தனித்த கலையாகப் பரிணமித்தது என்பதையும் விளக்கியுள்ளார்.
வட்டாரப் படைப்புகள் பகுதியில் 'நாகம்மாள்' ஆர். சண்முகசுந்தரம் பெயரும், வெகுஜன படைப்புகளிலும் தீவிர இலக்கியத்திலும் இயங்கியவர்கள் பட்டியலில் ஜெயகாந்தன் பெயரும் ஏனோ விடுபட்டுள்ளன. இலக்கிய வகைப்பாடுகளை அறிய சிறந்ததொரு நூல்.
படைப்பிலக்கியம் - சுப்பிரமணி இரமேஷ்; பக். 192; ரூ. 200; ஆதி பதிப்பகம், திருவண்ணாமலை - 606 806; ✆ 9159933990.
இலக்கியத்தின் முக்கியக் கூறுகளான கதை, கவிதை, நாடகங்களின் தொடக்க கால முயற்சிகள் முதல் இன்றைய வளர்ச்சி வரை சுருக்கமாகவும் தெளிவாகவும் இந்நூலில் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்.
மரபுக்கவிதை குறித்த கட்டுரையில், தொடக்கத்தில் கவிதையானது செய்யுள் என்றே அழைக்கப்பட்டது என்பதைப் புறநானூற்றுப் பாடலின் துணை கொண்டு விளக்கும் இவர், பரிபாடலில்தான் முதல் முதலில் 'கவிதை' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது என்கிறார். பின் கம்பர் 'சான்றோர் கவியென' எனக் கூறியதையும், கவிதைக்கு கவிமணி தரும் விளக்கத்தையும் குறிப்பிடுகிறார். மேலும், கவிதைக்கு இன்றியமையாததாகிய யாப்பிலக்கணத்தையும் தொட்டுக் காட்டியுள்ளார்.
புதுக்கவிதை பகுதியில், தொடக்கத்தில் புதுக்கவிதைக்கு இருந்த ஆதரவையும் எழுந்த எதிர்ப்பையும் சுட்டிக்காட்டியுள்ளார். புதுக்கவிதைக்கு அப்பெயரைச் சூட்டியவர் க.நா.சு. என்பதும், புதுக்கவிதையை எதிர்த்த பண்டிதர்களைச் சாடிய புதுமைப்பித்தனும் புதுக்கவிதை மீது அதிருப்தியே கொண்டிருந்தார் என்பதும் சுவையான செய்திகள்.
சிறுகதை குறித்த பகுதியில், தமிழில் சிறுகதை முயற்சி, அதன் தொடர்ந்த வளர்ச்சி, சிறுகதைக்குத் தேவையான கதைப்பின்னல், பாத்திரத்தேர்வு, முடிவு, தலைப்பு போன்றவற்றையும் விரித்துரைத்துள்ளார். நாடகம் என்கிற பகுதியில், தொடக்க காலத்தில் நாடகத்திலும் நடனத்திலும் பாடல்களே அதிகம் இடம்பெற்றிருந்ததால் இரண்டும் ஒன்றாகவே கருதப்பட்டன என்பதையும், பின் நாடகம் உரைநடை வடிவமாக மாறியதால் தனித்த கலையாகப் பரிணமித்தது என்பதையும் விளக்கியுள்ளார்.
வட்டாரப் படைப்புகள் பகுதியில் 'நாகம்மாள்' ஆர். சண்முகசுந்தரம் பெயரும், வெகுஜன படைப்புகளிலும் தீவிர இலக்கியத்திலும் இயங்கியவர்கள் பட்டியலில் ஜெயகாந்தன் பெயரும் ஏனோ விடுபட்டுள்ளன. இலக்கிய வகைப்பாடுகளை அறிய சிறந்ததொரு நூல்.