முகப்பு
நூல் அரங்கம்

அயோத்திப் பெருமாள்

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:15 AM
பகிர்:

அயோத்திப் பெருமாள்: தமிழ் மரபில் இராம கதை - கோகுல் சேஷாத்ரி; பக்.500; ரூ.400; பழனியப்பா பிரதர்ஸ், சென்னை-14; ✆ 73585 95111.

'ஆதி காவியம்' என்று புகழப்பட்டு, இந்தியாவின் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்றாக உள்ள ராமாயணம் தொடர்பான தமிழ் மரபுகளை வரலாற்று ரீதியாக, விரிவாக ஆராயும் நூல் இது. வட தேச தசரத ராமனின் அயோத்தியுடன் தென்னாட்டு ராமன் திருக்கோயில்களின் தொடர்பை விரிவாகவும் தெளிவாகவும் எடுத்துரைக்கிறது.

ராமன், ராகவன் உள்ளிட்ட பெயர்களில் நெடுங்காலம் தமிழகத்தில் வழிபடப்பட்டு வந்துள்ள பல ராமர் கோயில்களை 'திரு அயோத்தி' என்று அழைத்து வந்தமையை சான்றுகளுடன் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தின் இராம கதை மரபுகள், வழிபாடு குறித்த ஆய்வு நூலாக அமைந்துள்ளது.

சங்க இலக்கியத்தில் வீரனாக கூறப்பட்ட இராமன், பின்னர் எழுந்த காப்பியங்களில் திருமாலின் அவதாரமாக குறிப்பிடப்படுவதையும் நூலாசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.

தமிழ் பண்பாட்டு மரபில் ராம சரிதத்தின் நீட்சியை பல இலக்கிய, கல்வெட்டு, திருக்கோயில் அமைப்பு சான்றுகளுடன் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர். பராந்தக சோழன் குறித்த முனைவர் பட்டப்படிப்புக்காக தொடங்கிய ஆராய்ச்சி, தசரதராமனின் தமிழக பண்பாட்டு மரபு குறித்த நூலாக நிறைவடைந்து இருக்கிறது. மிகவும் நிறைவான மரபு ஆய்வு நூல். வரலாற்று ஆய்வை விரும்புபவரை மட்டுமல்லாமல் பொது வாசகரையும் வசீகரிக்கும் நூலாக அமைந்துள்ளது.

ஆன்மிகம், வரலாற்று ஆர்வலர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இது.

அயோத்திப் பெருமாள்: தமிழ் மரபில் இராம கதை - கோகுல் சேஷாத்ரி; பக்.500; ரூ.400; பழனியப்பா பிரதர்ஸ், சென்னை-14; ✆ 73585 95111.

'ஆதி காவியம்' என்று புகழப்பட்டு, இந்தியாவின் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்றாக உள்ள ராமாயணம் தொடர்பான தமிழ் மரபுகளை வரலாற்று ரீதியாக, விரிவாக ஆராயும் நூல் இது. வட தேச தசரத ராமனின் அயோத்தியுடன் தென்னாட்டு ராமன் திருக்கோயில்களின் தொடர்பை விரிவாகவும் தெளிவாகவும் எடுத்துரைக்கிறது.

ராமன், ராகவன் உள்ளிட்ட பெயர்களில் நெடுங்காலம் தமிழகத்தில் வழிபடப்பட்டு வந்துள்ள பல ராமர் கோயில்களை 'திரு அயோத்தி' என்று அழைத்து வந்தமையை சான்றுகளுடன் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தின் இராம கதை மரபுகள், வழிபாடு குறித்த ஆய்வு நூலாக அமைந்துள்ளது.

சங்க இலக்கியத்தில் வீரனாக கூறப்பட்ட இராமன், பின்னர் எழுந்த காப்பியங்களில் திருமாலின் அவதாரமாக குறிப்பிடப்படுவதையும் நூலாசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.

தமிழ் பண்பாட்டு மரபில் ராம சரிதத்தின் நீட்சியை பல இலக்கிய, கல்வெட்டு, திருக்கோயில் அமைப்பு சான்றுகளுடன் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர். பராந்தக சோழன் குறித்த முனைவர் பட்டப்படிப்புக்காக தொடங்கிய ஆராய்ச்சி, தசரதராமனின் தமிழக பண்பாட்டு மரபு குறித்த நூலாக நிறைவடைந்து இருக்கிறது. மிகவும் நிறைவான மரபு ஆய்வு நூல். வரலாற்று ஆய்வை விரும்புபவரை மட்டுமல்லாமல் பொது வாசகரையும் வசீகரிக்கும் நூலாக அமைந்துள்ளது.

ஆன்மிகம், வரலாற்று ஆர்வலர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இது.

முழு கட்டுரையைப் படிக்க →