முகப்பு
நூல் அரங்கம்

காவல் துறையின் கதை

நேர்மையான காவல் அதிகாரி எதிர்கொள்ளும் பிரச்னைகளைப் புரிய வைக்கும் இந்நூல் ஒட்டு மொத்த உலக காவல்துறையின் கதையாகத்தான் இருக்கிறது.

Updated On : 9 செப்டம்பர், 2025 at 5:15 AM
பகிர்:

காவல் துறையின் கதை - துமிலன்; பக். 496; ரூ.470; அருணோதயம், சென்னை-14; ✆ 93634 50177.

இரவில் பொருள்கள் களவு போகாமல் காவல் காக்க காவலர்களை நியமித்ததுதான் இப்போதுள்ள காவல் துறையின் தொடக்கப் புள்ளி என ஆசிரியர் பதிவிடுகிறார்.

காவல் துறையின் பிரிவுகளான உளவுத் துறை , லஞ்ச ஒழிப்புத் துறை, கைரேகை நிபுணத்துவப் பிரிவு, மோப்ப நாய் பிரிவு போன்றவற்றின் தொடக்கம் எங்கு என்பதையும், தற்போது அவை எப்படிச் செயல்படுகின்றன என்பதையும், துப்பு துலக்கும் முறைகளையும், கையாளும் விஞ்ஞான யுத்திகளையும் காவல் துறையின் கதையாக சொல்கிறார் நூலாசிரியர். பல மேற்கத்திய நாடுகளுக்கு முன்பாகவே இந்தியாவில் கைரேகையைப் பயன்படுத்தும் முறை வந்ததாகக் குறிப்பிடுகிறார்.

சுவாரஸ்யமான தகவல்கள் பல கொட்டிக் கிடக்கும் இத்தொகுப்பில், சம்பாதிக்க முடியாதவன் திருடுவான், உடல் பலமில்லாதவன் கொலை செய்வான் என்னும் ஆதிகால சூத்திரத்தை மையமாக வைத்து காவலர்கள் தங்கள் விசாரணையைத் தொடங்குவார்கள் எனக் கூறுகிறார் ஆசிரியர். மேலும் இந்தியாவின் நிர்வாகமுறைகள் பெரும்பாலும் அர்த்த சாஸ்திரம், மனுதர்மம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இருந்ததாக குறிப்பிடுகிறார்.

ஆசிரியரின் நகைச்சுவை உணர்வு ஆங்காங்கே வெளிப்படுவதை வாசிக்கும் நம்மால் உணர முடிகிறது. உதாரணத்துக்கு 'முடிச்சை அவிழ்த்தல்'.

நேர்மையான காவல் அதிகாரி எதிர்கொள்ளும் பிரச்னைகளைப் புரிய வைக்கும் இந்நூல் ஒட்டு மொத்த உலக காவல்துறையின் கதையாகத்தான் இருக்கிறது.

காவல் துறையின் கதை - துமிலன்; பக். 496; ரூ.470; அருணோதயம், சென்னை-14; ✆ 93634 50177.

இரவில் பொருள்கள் களவு போகாமல் காவல் காக்க காவலர்களை நியமித்ததுதான் இப்போதுள்ள காவல் துறையின் தொடக்கப் புள்ளி என ஆசிரியர் பதிவிடுகிறார்.

காவல் துறையின் பிரிவுகளான உளவுத் துறை , லஞ்ச ஒழிப்புத் துறை, கைரேகை நிபுணத்துவப் பிரிவு, மோப்ப நாய் பிரிவு போன்றவற்றின் தொடக்கம் எங்கு என்பதையும், தற்போது அவை எப்படிச் செயல்படுகின்றன என்பதையும், துப்பு துலக்கும் முறைகளையும், கையாளும் விஞ்ஞான யுத்திகளையும் காவல் துறையின் கதையாக சொல்கிறார் நூலாசிரியர். பல மேற்கத்திய நாடுகளுக்கு முன்பாகவே இந்தியாவில் கைரேகையைப் பயன்படுத்தும் முறை வந்ததாகக் குறிப்பிடுகிறார்.

சுவாரஸ்யமான தகவல்கள் பல கொட்டிக் கிடக்கும் இத்தொகுப்பில், சம்பாதிக்க முடியாதவன் திருடுவான், உடல் பலமில்லாதவன் கொலை செய்வான் என்னும் ஆதிகால சூத்திரத்தை மையமாக வைத்து காவலர்கள் தங்கள் விசாரணையைத் தொடங்குவார்கள் எனக் கூறுகிறார் ஆசிரியர். மேலும் இந்தியாவின் நிர்வாகமுறைகள் பெரும்பாலும் அர்த்த சாஸ்திரம், மனுதர்மம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இருந்ததாக குறிப்பிடுகிறார்.

ஆசிரியரின் நகைச்சுவை உணர்வு ஆங்காங்கே வெளிப்படுவதை வாசிக்கும் நம்மால் உணர முடிகிறது. உதாரணத்துக்கு 'முடிச்சை அவிழ்த்தல்'.

நேர்மையான காவல் அதிகாரி எதிர்கொள்ளும் பிரச்னைகளைப் புரிய வைக்கும் இந்நூல் ஒட்டு மொத்த உலக காவல்துறையின் கதையாகத்தான் இருக்கிறது.

முழு கட்டுரையைப் படிக்க →