சௌந்தர்யபுரத்தில் நூதன ஆஞ்சநேய பிரதிஷ்டை
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மாவட்டத்தி ஸெளந்தர்யபுரம் கிராமத்தில் உள்ளது
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மாவட்டத்தி ஸெளந்தர்யபுரம் கிராமத்தில் உள்ளது பழமையான அருள்மிகு அம்புஜவல்லி நாயிகா ஸமேத ஸ்ரீ ஆதிகேசவப்பெருமாள் திருக்கோயிலில் தாயார் சந்நதிக்கு அருகில் அக்காலத்திலேயே பிரதிஷ்டையாகி உள்ளது ஸ்ரீ பத்மசக்கரம் வேறு எந்த வைணவ திருக்கோயிலிலும் இவ்விதமான அமைப்பை தரிசனம் செய்ய இயலாது. இதனை வணங்கியவர்களுக்கு ஸ்ரீ லக்ஷ்மிகடாக்ஷத்தை அளிக்கவல்லது. கிரக பீடைகளிலிருந்தும் நம்மைக் காப்பாற்றுகிறது. 44 பத்ம தளங்களைக் கொண்டு இந்த பத்ம சக்கரத்திற்கு சந்நதி அமைக்கப்பட்டு அதனுடைய சம்ப்ரோஷணம் சமீபத்தில் நிறைவடைந்தது.
இச்சந்நதியை தரிசிக்க விரும்புவோர் காஞ்சிபுரத்தில் இருந்து 33 கி-மீ வந்தவாசி அருகில் தென்னாங்கூர் பாண்டுரங்கன் திருக்கோயிலுக்கு 5 கி.மீ தூரத்தில் உள்ளது. வந்தாவாசியிலிருந்து மினிபஸ் வசதி உண்டு.