ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை இன்று(ஆகட்ஸ் 16) மாலை நடை
திறக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
இன்று மாலை 5 மணிக்கு மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடை திறந்து
தீபம் ஏற்றுவார். வேறு எந்தவித விசேஷ பூஜைகளும் கிடையாது. இன்று இரவு 10
மணிக்கு நடை சாத்தப்பட்டு, நாளை அதிகாலை 4.00 மணிக்கு நடை திறக்கப்படும்.
நெய் அபிஷேகத்தை தொடர்ந்து கணபதி ஹோமம், உஷபூஜை போன்ற வழக்கமான பூஜைகளுடன் உதயாஸ்தமன பூஜை, சகஸ்ரகலசம், அஷ்டாபிஷேகம் போன்றவை நடைபெறும். இன்று முதல் 21-ம் தேதி வரை நடை திறக்கப்பட்டு, அன்று இரவு படிபூஜையுடன் இரவு 10.00 மணிக்கு நடை அடைக்கப்படும்.
இதற்கு, புதிய தந்திரியாக கண்டரரு மகேஸ்வரரு பொறுப்பேற்கின்றார்.