சென்னை, வடதிருமுல்லைவாயிலில் அமைந்துள்ள ஸ்ரீ மன்னாதீஸ்வரர் ஸ்ரீ பச்சைமலையம்மன் திருக்கோயிலில் 28.01.18 அன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
ஸ்ரீ அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகியாய் ஸ்ரீ பச்சைமலையம்மன் சமேதராய் விளங்கும் ஸ்ரீமன்னாதீஸ்வரர் திருக்கோயிட்ல கொண்டெழுந்தருளியிருக்கும் வடதிருமுல்லைவாயில் சூரிய புஷ்கரணிக்கரையில், தேவர் முதலியவர்களுக்கு இடுக்கண் செய்து வந்த ஹதாசுரனை அவனது படைத்துணையாகிய மஹாபூதம் இவர்கள் சம்ஹதாரநிமித்தம் வேற்றுருக்கொண்டு, மெச்சியவர்களை இச்சையாய்க் கொடுத்தருளும் ஸ்ரீ பச்சைமலையம்மன் திருக்கோயிலில் நன்முறையில் ஸ்தாபிக்கப்பட்ட வாழ்வரசர் சப்தரிஷிகள் மகாமண்டபம் மற்றும் பரிவார சன்னதிகளுக்கு வண்ணம் தீட்டு புதுப்பிக்கப்பட்டு,
நிகழும் சாலிவாஹன வருடம் 1939 ஹேவிளம்பி வருஷம் தை மாதம் 15-ம் நாள் 28.01.18 ஞாயிற்றுக்கிழமை சுக்லபக்ஷ (வளர்பிறை) துவாதசி திதி மிருகசீரிஷம் நட்சத்திரம் சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மீனம் லக்ளத்தில் பரிவார தேவதைகள் மற்றும் ஸ்ரீமன்னாதீஸ்வரர் ஸ்ரீ பச்சைமலையம்மனுக்கு காஞ்சிஜெகத்குரு காமகோடி வீடம் ஸ்ரீசங்கராசாரிய சுவாமிகள் அனுக்கிரகத்துடன் மஹாகும்பாபிஷேகம் அடியிற்கண்ட நிகழ்ச்சி நிரல்படி நடைபெறும் இப்புண்ணிய நிகழ்ச்சியில் மெய்யன்பர்கள் கலந்துகொண்டு அம்மனின் திருவருளைப் பெற்றுயுய்யுமாறு அன்போடு வேண்டுகிறோம்.