மைசூரு சாமுண்டிமலையில் ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்ட நந்திக்கு மகா அபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.
மைசூரு அருகே சாமுண்டிமலையில் பிரசித்தி பெற்ற சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த சாமுண்டி மலை அடிவாரத்தில் 13 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட நந்தி சிலை ஒன்று ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்டது.
இந்த மகா நந்திக்கு ஆண்டுதோறும் கன்னட கார்த்திகை மாதத்தையொட்டி மகா அபிஷேகம் நடத்தப்படுகிறது. அதன்படி நேற்று மகா நந்திக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இதில் பால், தயிர் என பலவிதமான அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு மகாநந்தியை வழிபட்டுச் சென்றனர்.