திருமலையில் எதிரொலித்த ஸ்ரீராம நாமம்!
திருமலையில் நாதநீராஜன மண்டபத்தில் நடந்த சுந்தரகாண்ட பாராயணத்தின்போது உச்சரிக்கப்பட்ட ஸ்ரீராம நாமம் திருமலையில் எதிரொலித்தது.
திருமலையில் நாதநீராஜன மண்டபத்தில் நடந்த சுந்தரகாண்ட பாராயணத்தின்போது உச்சரிக்கப்பட்ட ஸ்ரீராம நாமம் திருமலையில் எதிரொலித்தது.
கரோனா தொற்றிலிருந்து உலக மக்கள் நலம் பெற வேண்டி திருப்பதி தேவஸ்தானம் கடந்த ஜூன் மாதம் முதல் சுந்தரகாண்ட பாராயணத்தை நடத்தி வருகிறது. 68 பிரிவுகள் கொண்ட சுந்தர காண்டத்தில் 14 பிரிவுகளின் பாராயணம் நடைபெற்று முடிந்துள்ளது. இவை தேவஸ்தானத் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. 150 முதல் 200 ஸ்லோகங்கள் பாராயணம் செய்யப்பட்டவுடன் அதை தேவஸ்தானம் அகண்ட பாராயணமாக நடத்தி வருகிறது.
இதுவரை 3 அகண்ட பாராயணங்கள் திருமலையில் முடிந்துள்ள நிலையில் சனிக்கிழமை காலை 12-ஆவது பிரிவு முதல் 14-ஆவது பிரிவு வரையிலுள்ள 146 ஸ்லோகங்கள் அகண்ட பாராயணம் செய்யப்பட்டது. 200 வேத பண்டிதா்கள் இணைந்து திருமலையில் உள்ள நாதநீராஜன மண்டபத்தில் ஸ்ரீராமநாமத்தைப் பாராயணம் செய்தனா். இதில், பக்தா்களும் தேவஸ்தான அதிகாரிகளும் கலந்து கொண்டனா். இதனால் திருமலை முழுவதும் ஸ்ரீராம நாமம் எதிரொலித்தது.
Advertisement
இதுபோன்ற அகண்ட பாராயணத்தால் உலக மக்கள் அனைத்து வளங்களையும் பெற்று, ஆரோக்கியமாக இருப்பா் என்பது நம்பிக்கை. அதனால் தேவஸ்தானம் இதுபோன்ற பாராயணங்கள் திருமலையில் நடத்தப்படுகின்றன.