அஜித் - ஷாலினியின் அமர்க்களம் படத்தின் மறுவெளியீட்டுத் தேதி!
நடிகர் அஜித்தின் அமர்க்களம் படத்தின் மறுவெளியீடு குறித்து...
நடிகர் அஜித் குமார் மற்றும் நடிகை ஷாலினி இணைந்து நடித்த அமர்க்களம் திரைப்படம் இந்த மாதம் மறுவெளியீடாக உள்ளது.
இயக்குநர் சரண் இயக்கத்தில் நடிகர்கள் அஜித் குமார், ஷாலினி நடிப்பில் கடந்த 1999 ஆம் ஆண்டு அமர்க்களம் திரைப்படம் வெளியானது. காதல் படமான இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று அஜித்துக்கு வெற்றிப்படமாகவும் அமைந்தது.
வெங்கடேஷ்வராலயம் தயாரிப்பில் உருவான இந்தப் படம் அஜித் வாழ்க்கையில் முக்கியமானதாக அமைந்தது. பரத்வாஜ் இசையில் உருவான இந்தப் படத்தில் இடம்பெற்ற, ‘சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்’ பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது.
Advertisement
இப்படம் வெளியாகி 25 ஆண்டுகளைக் கடந்ததைக் கொண்டாடும் விதமாக இதனை மறுவெளியீடு செய்யவுள்ளதாக இயக்குநர் சரண் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்தப் படம் வரும் ஏப்.24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இயக்குநர் சரண் தனது எக்ஸ் பக்கத்தில், “ஒரு முரட்டுப்புயலை புரட்டிப் போட்ட தென்றல்! படத்திலும் படப்பிடிப்பிலும் ஊடாடிய காதல் பட்டவர்த்தனமானதை பறைசாற்றும் விதமாக மீண்டும் உங்கள் ரசிப்பை மீட்ட வருகிறது இந்த அமர்க்களம்!” எனக் கூறியுள்ளார்.