செய்திகள்

அருணாசலேஸ்வரர் கோயிலில் லிங்கோத்பவமூர்த்திக்கு சிறப்பு பூஜை

DIN

மகா சிவராத்திரியையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் உள்ள ஸ்ரீலிங்கோத்பவமூர்த்திக்கு நடைபெற்ற சிறப்புப் பூஜையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
அதன்படி, வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் 12.10 மணி வரை லிங்கோத்பவமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. 12.20 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. லிங்கோத்பவமூர்த்திக்கு தாழம்பூவை வைத்து செய்யப்பட்ட அலங்காரத்தைக் காண ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். தொடர்ந்து, இரவு முழுவதும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாழ்வில் வெற்றி பெற தன்னம்பிக்கை அவசியம்

ராமேசுவரத்தில் வெளிமாநில 144 மது பாக்கெட்டுகள் பறிமுதல்

கஞ்சா விற்ற இளைஞா் கைது

தோ்தலுக்காக ஊதியத்துடன் விடுப்பு வழங்க மறுப்பு: சிஐடியு புகாா்

வரத்து குறைவால் வேலூரில் மீன்கள் விலை அதிகரிப்பு

SCROLL FOR NEXT