செய்திகள்

சீனிவாச பெருமாள் திருக்கல்யாணம்

தினமணி

அரக்கோணம் பஜார் பகுதி பொதுமக்களின் திருமலை-திருப்பதி பாதயாத்திரை பயணத்தை முன்னிட்டு, வரசித்தி விநாயகர் கோயில் அருகே ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாள் திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, சீர்வரிசைகளுடன் அழைத்து வரப்பட்ட சீனிவாச பெருமாளை ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் எதிர்கொண்டழைக்கும் வைபவம் நடைபெற்றது. 
ஆடல் பாடல்களுடன் சீனிவாச பெருமாள் அழைத்து வரப்பட்டு மேடையில் அமர்த்தப்பட்டதைத் தொடர்ந்து திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. 
நிகழ்ச்சியில், கோயில் திருப்பணி நிர்வாகக் குழுத் தலைவர் என்.அரிகிருஷ்ணன், தொழிலதிபர் மணிநாயுடு, நகராட்சி ஒப்பந்ததாரர் கோபண்ணாரவி, அதிமுக பிரமுகர்கள் தாமு, முனுசாமி, நகர திமுக நிர்வாகி கோ.வ.தமிழ்வாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

SCROLL FOR NEXT