நேரில் சென்று தரிசிக்க முடியாத நெஞ்சங்களுக்கு.. பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழா (புகைப்படங்கள்)
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழா ஏப்ரல் 3-ம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழா ஏப்ரல் 3-ம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஆண்டுதோறும் பண்ணாரி அம்மன் கோயிலில் குண்டம் விழா சிறப்பாக நடைபெற்று வருகின்றது. அந்தவகையில் இந்தாண்டுக்கான குண்டம் விழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி கோயிலைச் சுற்றியுள்ள கிராமங்களில் பண்ணாரி அம்மன் உற்சவர் ஊர்வலம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நாள்தோறும் சிறப்பு பூஜைகள், மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடனங்கள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வாக குண்டம் விழா நேற்று நடைபெற்றது.
கல்லூரி மாணவர்கள், மாணவிகள், திருநங்கைகள், கைக்குழந்தையுடன் பெண்கள், காவலர்கள், வனத்துறையினர் என லட்சக்கணக்கானோர் தீ மிதித்தனர். ஆண்டுதோறும் பூசாரி இறங்கியவுடன் மலர் சப்பரம் குண்டம் இறங்குவது வழக்கம். இந்த ஆண்டு முதன்முறையாக சப்பரம் குண்டத்தில் இறக்கப்படவில்லை.
தமிழகம், கர்நாடகத்தில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டனர்.
பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் விழாவை நேரில் சென்று தரிசிக்க முடியாத ஏங்கும் நெஞ்சங்களுக்காக இந்த புகைப்படங்கள்...