முகப்பு
செய்திகள்

குற்றாலநாதர் கோயிலில் சித்திரை விஷு தேரோட்டம்

திருநெல்வேலி மாவட்டம், குற்றாலம் அருள்மிகு குற்றாலநாதர் கோயில் சித்திரை விஷு திருவிழாவின் 5ஆம் நாளான திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

Updated On : 10 ஏப்ரல், 2018 at 2:33 AM
குற்றாலநாதர் கோயில் சித்திரை விஷு திருவிழாவையொட்டி நடைபெற்ற தேரோட்டம்.
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், குற்றாலம் அருள்மிகு குற்றாலநாதர் கோயில் சித்திரை விஷு திருவிழாவின் 5ஆம் நாளான திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
இக்கோயிலில் சித்திரை விஷு திருவிழா கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்று வருகிறது. காலை மற்றும் மாலையில் திருவிலஞ்சிக்குமாரர், சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வரும் நிகழ்வு நடைபெறுகிறது.
விழாவின் 5ஆம் நாளான திங்கள்கிழமை அதிகாலையில் சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. காலையில் முதலாவதாக விநாயகர், தொடர்ந்து திருவிலஞ்சிக்குமாரர், சுவாமி மற்றும் அம்பாள் என நான்கு தேர்கள் பக்தர்களால் வடம்பிடித்து இழுக்கப்பட்டன.
விழாவில் 11ஆம் தேதி காலை 9.30-க்கும், இரவு 7 மணிக்கும் நடராஜமூர்த்திக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடைபெறுகிறது. 12ஆம் தேதி சித்திரசபையில் நடராஜமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடைபெறுகிறது.
14ஆம் தேதி சித்திரை விஷு தீர்த்தவாரி நடைபெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் சு.செல்வகுமாரி தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.