செய்திகள்

அய்யா வைகுண்டர் கோயிலில் ஆனித்திருவிழா நாளை தொடக்கம்

DIN

கோவை, ஈச்சனாரியில் உள்ள அய்யா வைகுண்டர் கோயிலில் ஆனித்திருவிழா நாளைத் தொடங்குகின்றது. 

ஈச்சனாரியில் அய்யா வைகுண்டர் பூமனவைப்பதி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் நாளை ஆனித்திருவிழா தொடங்கி ஜூலை 16-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி நாளை காலை அதிகாலை கோயில் நடை திறக்கப்படும். 

ஜூலை 15-ம் தேதி உகப்படிப்பு, அருள்வாக்கு, திருஏடு வாசிப்பு, பட்டாபிஷேகம், முறைப்பாரி எடுத்து சூரிய வாகனத்தில் ஈச்சனாரி விநாயகர் கோயில் வரை அய்யா பவனி வருதல் நிகழ்ச்சிகள் நடைபெறும். 

ஜூலை 16-ம் தேதி குடும்பப்பால் வைத்து நித்தம் திருநாள் வாகனத்தில் அய்யா பவனி வருதல் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT