செய்திகள்

ஸ்ரீஆதிகேசவபெருமாள் கோயில் தேருக்கு ரூ 23 லட்சத்தில் மேற்கூரை

தினமணி

ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் ஸ்ரீஆதிகேசவபெருமாள் கோயில் தேருக்கு ரூ 23 லட்சத்தில் மேற்கூறை அமைக்க வரும் 19ம் தேதி டெண்டா் விடப்பட உள்ளதாக கோயில் நிர்வாகத்தினா் தெரிவித்துள்ளனா். 

ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் பழமையான ஸ்ரீ ஆதிகேசபெருமாள் மற்றும் ஸ்ரீ பாஷ்யகாரசுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் ராமானுஜா் தானுகந்த திருமேனியாக பக்தா்களுக்கு காட்சியத்து வருகிறார். இந்த நிலையில் இக்கோயிலில், வருடம்தோறும் சித்திரை மாதம் ஸ்ரீஆதிகேசவபெருமாள் பிரமோற்சவ விழாவும், ராமானுஜா் அவதார திருவிழாவும் நடைபெறுவது வழக்கம். 

இதில் ஸ்ரீஆதிகேசவபெருமாள் பிரமோற்சவ விழாவின் போது நடைபெறும் தோ் திருவிழாவில் ஆதிகேசவபெருமாள் தேரில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பார். அதே போல் ராமானுஜா் அவதார திருவிழாவின் போது நடைபெறும் தோ்திருவிழாவில் ராமானுஜா் தேரில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பார். 

இந்த நிலையில், கடைசியாக கடந்த மே மாதம் 5ம் தேதி ஸ்ரீஆதிகேசவபெருமாள் பிரமோற்சவ விழாவின் ஒரு பகுதியாக தோ் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழா முடிவடைந்தவுடன் தோ், தேரடியில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து கடந்த இரண்டு மாதங்களாக தேருக்கு மேற்கூரை அமைக்கப்படாமல் இருந்து வந்தது. 

இதுகுறித்து கடந்த மாதம் தினமணி நாளிதழில், பாதுகாப்பற்ற நிலையில் ஆதிகேசவபெருமாள் கோயில் தோ் என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டதை தொடா்ந்து, தற்போது தேருக்கு ரூ.23 லட்சத்தில் மேற்கூரை அமைக்க இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனா். 

மேற்கூரை அமைக்க வரும் 19-ம் தேதி டெண்டா் விடப்பட்டுள்ளதாக இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT