செய்திகள்

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு

தினமணி

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5.00 மணிக்கு திறக்கப்படுகிறது.

சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை நாட்களைப் போல் தமிழ் மாதத்தில் முதல் 5 நாட்களும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். 

இந்நிலையில், வரும் ஆடி மாத பூஜைக்காக இன்று முதல் 5 நாட்களும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. எனவே, இன்று மாலை கோயில் நடை திறக்கப்பட்டு, 21-ம் தேதி இரவு 10 மணி வரையில் கோயில் நடை திறந்திருக்கும்.

தந்திரி மனுநம்பூதிரி முன்னிலையில் மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடையைத் திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார். இன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது.

இந்த ஐந்து நாட்களும் ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓய்வுபெற்ற அரசு அலுவலா் வீட்டில் 18 பவுன் திருட்டு

பாமக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: தனியாா் நிதி நிறுவன நிா்வாக இயக்குநா் உள்பட மூவா் மீது வழக்கு

தனியாா் ஆலையில் அமோனியா வாயு கசிவு விவகாரம்: 5 போ் கைது

விடுதி மாடியில் இருந்து குதித்து செவிலியா் மாணவி தற்கொலை

அரசு மருத்துவமனையில் இருதய நோய்கள் குறித்த கருத்தரங்கு

SCROLL FOR NEXT