செய்திகள்

திருச்சி சமயம்புரம் கோயில் யானைக்கு மதம் பிடித்தது: பாகன் பலி - பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்

தினமணி

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் யானைக்கு திடீரென மதம் பிடித்ததால் யானை தாக்கி பாகன் பரிதாபமாக உயிரிழந்தார். 

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உள்ள மசினி என்ற பெண் யானைக்கு திடீரென மதம் பிடித்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. யானையை அடக்க முயன்ற பாகன் கஜேந்திரனை (40) மிதித்ததில், பாகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

கோயிலுக்குள் இருந்த பக்தர்கள், குழந்தைகள், பெண்கள் அலறியடித்து ஓடினர். இதனால், சமயபுரம் மாரியம்மன் கோயில் நடை அவசர அவசரமாகச் சாத்தப்பட்டது. பின்பு யானையைக் கோயில் அறைக்குள் வைத்துப் பூட்டப்பட்டது. 

கோயில் யானை தூக்கி வீசியதில் 8 பேர் காயமடைந்ததாகவும், மேலும் இரண்டு பேர் பலத்த காயம் ஏற்பட்டு, கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

SCROLL FOR NEXT