செய்திகள்

திருவண்ணாமலை தீபத் திருவிழாவின் 5-ஆம் நாள்: கண்ணாடி ரிஷப வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரர் வீதியுலா

தினமணி

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் தீபத் திருவிழாவின் 5-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை கண்ணாடி ரிஷப வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரரும், இரவு வெள்ளி பெரிய ரிஷப வாகனத்தில் ஸ்ரீஅருணாசலேஸ்வரரும் வீதியுலா வந்தனர்.
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 14-ஆம் தேதி தொடங்கியது.
 இதையடுத்து, தினமும் காலை வேளைகளில் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசந்திரசேகரர் உள்ளிட்ட உத்ஸவர் சுவாமிகள் வீதியுலாவும், இரவு வேளைகளில் பல்வேறு வாகனங்களில் பஞ்ச மூர்த்திகள் வீதியுலாவும் நடைபெற்று வருகின்றன.
திருவிழாவின் 4-ஆம் நாளான சனிக்கிழமை இரவு மூஷிக வாகனத்தில் ஸ்ரீவிநாயகர், மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீமுருகப்பெருமான், கற்பக விருட்ச வாகனத்தில் ஸ்ரீஅருணாசலேஸ்வரர், வெள்ளி காமதேனு வாகனத்தில் ஸ்ரீபராசக்தியம்மன், வெள்ளி வாகனத்தில் ஸ்ரீசண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் வீதியுலா நடைபெற்றது.
கண்ணாடி ரிஷப வாகனத்தில்...: தீபத் திருவிழாவின் 
5-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை வெள்ளி மூஷிக வாகனத்தில் ஸ்ரீவிநாயகர், கண்ணாடி ரிஷப வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரர் வீதியுலா நடைபெற்றது.
இரவு 10 மணிக்கு மூஷிக வாகனத்தில் ஸ்ரீவிநாயகர், மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீமுருகப் பெருமான், வெள்ளி பெரிய ரிஷப வாகனத்தில் ஸ்ரீஅருணாசலேஸ்வரர், வெள்ளி வாகனங்களில் ஸ்ரீபராசக்தியம்மன், ஸ்ரீசண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் வீதியுலா வந்தனர். 
கோயில் ராஜகோபுரம் எதிரில் இருந்து புறப்பட்ட பஞ்ச மூர்த்திகள் தேரடி தெரு, திருவூடல் தெரு, பே கோபுரத் தெரு, பெரிய தெரு உள்ளிட்ட மாட வீதிகள் வழியாக வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் ரா.ஞானசேகர் மற்றும் கோயில் உபயதாரர்கள், ஊழியர்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முடிவுக்கு வந்தது 1000 எபிசோடுகளைக் கடந்த பிரபல தொடர்!

தேர்தல் ஆணையம் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்க வேண்டும்: எல்.முருகன்

அதிர்ச்சியளிக்கும் அல்லு அர்ஜுன் சம்பளம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரூ.4 கோடி பறிமுதல்: ஆவணங்கள் சிபிசிஐடி-யிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT