கும்பகோணம் வட்டம், நாச்சியார்கோயில் அருகில் உள்ள 61-ஏனாதிநல்லூர், அருள்மிகு கற்பகம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில், ஆறாம் நூற்றாண்டில் சிவதொண்டாற்றிய தீருநீற்றில் பேரன்பு கொண்டு வாழ்ந்து தனது உயர்ந்த பக்தியால் இறைவனுடன் நிறைந்த 63 நாயன்மார்களில் ஒருவரான, அருள்மிகு ஏனாதிநாத நாயனாரின் குருபூஜை மிகச் சிறப்பாக நடைப்பெற்றது.
இவ் விழாவினையொட்டி, 17-10-2018 அன்று காலை இத்தலத்திலுள்ள சுவாமி, அம்பாள், மற்றும் ஏனாதிநாத நயனார் ஆகிய மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்காரமும், அதன் பின் தூப- தீப ஆராதனைகளும், அதனைத் தொடர்ந்து, மாலை உற்சவர் வீதிஉலா நடைப்பெற்றது. இவ்விழாவில் வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இவ்விழா ஏற்பாட்டினை ஏனாதி நாத நாயனார் வழிபாட்டு நற்பணி மன்றம் மற்றும் கிராமவாசிகளும் செய்திருந்தார்கள்.