செய்திகள்

குணசீலம் பிரசன்ன வேங்கடாசலபதி கோயிலில் விமரிசையாக நடைபெற்ற திருத்தேரோட்டம்

DIN

குணசீலம் பிரசன்ன வேங்கடாசலபதி திருக்கோயிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடைபெற்றது. 

திருச்சி மாவட்டம், குணசீலம் பிரசன்ன வேங்கடாசலபதி பெருமாள் கோயிலில் கடந்த செப்.13-ல் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 8 நாட்களாக பல்வேறு வாகனத்தில் சுவாமி எழுந்தருளி அருள்பாலித்தார். 

விழாவின் முக்கிய நிகழ்வான இன்று தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரில் தாயார்களுடன் வேங்கடாசலபதி பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

தேரோட்டத் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். 23-ம் தேதி புஷ்ப பல்லக்கில் சுவாமி புறப்பாட்டுடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT