செய்திகள்

திருநெல்வேலி லட்சுமி நரசிங்கபெருமாள் கோயிலில் ஏப்.18-ல் தேரோட்டம்

DIN

திருநெல்வேலி நகரத்தில் உள்ள லட்சுமி நரசிங்கபெருமாள் கோயிலில் சித்ரா பெளர்ணமி உற்சவத்தை முன்னிட்டு ஏப்.18-ல் தேரோட்டம் நடைபெறுகிறது. 

இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்ரா பெளர்ணமி உற்சவம் நடைபெற்று வருகிறது. நிகழாண்டுக்கான விழாவையொட்டி புதன்கிழமை காலையில் சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.  தொடர்ந்து, கோயில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு, மஹா தீபாராதனை நடைபெற்றது. கோவிந்தா.. நரசிம்மா... முழக்கத்துடன் பக்தர்கள் சுவாமியை சேவித்தனர். 

தொடர்ந்து பத்து நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் சிம்ம வாகனம், அனுமன், ஆதிசேஷன் வாகனங்களில் சுவாமி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். ஏப். 14-ல் கருட சேவை நடைபெறும். ஏப்.18-ல் தேரோட்டமும், 19-ல் தீர்த்தவாரியும் நடைபெறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"இந்நாள் வரை இசையை நான் கற்றுக்கொள்ளவில்லை" - இளையராஜா

இந்திய அணியில் இடம்பிடிக்க ஐபில் தொடர் எளிய வழியா? கௌதம் கம்பீர் பதில்!

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர மே 24 வரை விண்ணப்பிக்கலாம்

2024-இல் நிச்சயம் இந்தியா கூட்டணி ஆட்சி தான்! -அகிலேஷ் யாதவ்

5ஆம் கட்டத் தேர்தலில் 57.65% வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT