செய்திகள்

சுந்தர வரதராஜப் பெருமாள் கோயிலில் தெப்போற்சவம்

DIN


உத்தரமேரூர் சுந்தர வரதராஜர் கோயிலில் தெப்போற்சவம் விமரிசையாக நடைபெற்றது. 
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூரில் பிரசித்தி பெற்ற ஆனந்தவல்லி சமேத சுந்தரவரதராஜப் பெருமாள் உள்ளது. இக்கோயிலில் தெப்போற்சவம் திங்கள்கிழமை தொடங்கியது. இதையொட்டி, பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன.  
பல்வேறு பூக்களால் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஸ்ரீதேவி, பூதேவியருடன் பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.  பின்பு, மாட வீதி வழியாக உலா வந்த பெருமாளை பக்தர்கள்  வழிபட்டனர். 
அதன் பின், கோயில் குளத்தில் வண்ண மலர்கள், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் ஸ்ரீதேவி, பூதேவிகளுடன் பெருமாள் (உற்சவர்) வலம் வந்தார்.  இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை வழிபட்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளிகொண்டான் லாரல் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

நாடு முழுவதும் 380 நகரங்களில் ‘க்யூட்-யுஜி’ எழுத்துத் தோ்வு -மே15 முதல் 18-ஆம் தேதிவரை நடக்கிறது

பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் பள்ளி 100 சதவீத தோ்ச்சி

விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 99.58 சதவீதம் தோ்ச்சி

தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT