செய்திகள்

திருப்பதியில் ரதசப்தமி விழா கோலாகலம்: கோவிந்தா கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் வழிபாடு

தினமணி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று காலை ரத சப்தமி விழா நடைபெற்றது. இதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் கூடியுள்ளனர். 

திருப்பதி ஏழுமலையான கோயிலில் காலை முதல் இரவு வரை 7 வாகனங்களில் எம்பெருமான் வீதிஉலா நடைபெறுகிறது. அனைத்து வாகனங்களிலும் உற்சவர்களான ஸ்ரீதேவி-பூதேவி சமேத மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள். 

இன்று காலை சூரியன் உதயமாகும் நேரத்தில் சூரிய ஜெயந்தி விழா நடைபெற்றது. சூரிய பிரபை வாகனத்தில் உற்சவர் சூரிய நாராயணமூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா எனப் பக்தி கோஷத்துடன் வழிபாடு செய்தனர். 

இதைத் தொடர்ந்து சிறிய சேஷ வாகனம், கருட வாகனம் உள்ளிட்ட 7 வாகனங்களில் எம்பெருமான் எழுந்தருள உள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

SCROLL FOR NEXT