செய்திகள்

அத்திவரதரை இன்னும் தரிசிக்கவில்லையா? உங்களுக்காகவே தரிசன நேரம் மேலும் நீட்டிப்பு!

அத்திகிரி அருளாளனை இனி இரவு 10 மணி வரை தரிசிக்கலாம் என்று காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

தினமணி

அத்திகிரி அருளாளனை இனி இரவு 10 மணி வரை தரிசிக்கலாம் என்று காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜப் பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் பெருவிழா கடந்த 1-ம் தேதி தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, ஆகஸ்ட் 17-ம் தேதி வரை 48 நாள்களுக்கு நடைபெறவுள்ளது.

இப்பெருவிழாவில் கலந்துகொண்டு அத்திவரதரை தரிசனம் செய்வதற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரத்தை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர். 

இந்நிலையில், கடந்த 8 நாட்களில் சுமார் 8.50 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒன்பதாவது நாளான இன்றும் கூட்டம் கணிசமாக அதிகரித்துக் காணப்படுகிறது. நாளுக்கு நாள் தொடர்ந்து பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருவதால், கூடுதல் நேரம் அறிவிக்கப் பக்தர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். 

பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, இனி காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை அத்திவரதரை தரிசிக்க கால நேரம் நீட்டித்து மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா உத்தரவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேல் இருந்தால், ஒளியுண்டு... சாக்‌ஷி அகர்வால்!

பொதுவெளியில் மெக்சிகோ அதிபரிடம் அத்துமீறிய நபர்! என்ன நடந்தது?

சின்ன மருமகள் தொடரில் மின்னலே நாயகன்!

கருப்பு சிவப்பு சைக்கிளில் வந்து திமுகவிற்கு ஆதரவு கொடுத்தாரே விஜய்! - Aadhav Arjuna

விராட் கோலிக்கான மிகச் சிறந்த பிறந்த நாள் பரிசு - அவர் மீதான நம்பிக்கையே!

SCROLL FOR NEXT